வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். கவாசகி, நிஞ்சா உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில் சாகசம் செய்யும் வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு  செய்து யூட்யூபில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி … Read more

திடீர் உடல்நலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

 திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட  விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கார் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய பாதிப்பு … Read more

அக்டோபர் மாதத்தில் மட்டும் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் மீதமிருக்கும் … Read more

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு: மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவை கடந்த 26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கொலுவை பொதுமக்கள் பார்வையிட முதன்முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் (அக்.1) முதல் அக்.5-ம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை ஆளுநர்மாளிகையில் மக்கள் கொலுவை காணலாம். கொலுவை காண விருப்பமுள்ளவர்கள், பெயர், பாலினம், முகவரி, தொடர்பு … Read more

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாக ஸ்ரீமதியின் தாய் ஆவேசம்..!!

கடந்த ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையில் வெடித்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என போராட்டத்தில் குதித்த பெற்றோரை அப்போதே நீதிமன்றம் கண்டித்தது. மகளின் உடலை வைத்துக் கொண்டு பந்தயம் கட்டுகிறீர்களா? என நீதிமன்றம் அப்போது கேள்வி எழுப்பியது. இதனிடையே மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நடந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்த திருமாவளவன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் … Read more

மக்களுக்கு அடுத்த இடி..!! ஆம்னி பேருந்துகளின் புதிய கட்டண பட்டியல் வெளியீடு..!!

பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.ஆனால் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்குய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போகிறது.. இதனால் பேருந்து பயணத்தை நாடுகின்றனர். அதிலும், குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது … Read more

“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” – அமைச்சர் பொன்முடி

சென்னை: ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவர்கள் 31 ஆயிரத்து … Read more

விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நேற்று அவர்வெளியிட்ட செய்தி: ரத்த தானம் மூலம், விலை மதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் முதல்நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய … Read more

ஓபிஎஸ் வழக்கை விசாரித்து முடிக்கும்வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more