சாத்தான்குளம் வழக்கு | காவல் ஆய்வாளர் மீண்டும் மீண்டும் அடிக்க தூண்டினார் – நீதிமன்றத்தில் பெண் போலீஸ் சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் தலைமை காவலர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நீதிமன்றத்தில் ஆஜராகி சட்சி ஆளித்தார். அப்போது, “ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 10 காவலர்களும் மீண்டும் மீண்டும் தாக்கி … Read more

அச்சுறுத்தும் காய்ச்சல்…தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 37 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸை பொதுமக்கள் இலவசமாக செலுத்தி கொள்வதற்கான காலக்கெடு வரும் 30 ஆம் தேதியுடன் (செப்டம்பர் 30) முடிவடைய உள்ளது. அதன் பின்னர் கொரோனா முதல், இரண்டாலது மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புவோர் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாகவோ, தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தியோதான் செலுத்தி கொள்ள … Read more

அரசு பள்ளியில் சாணிபவுடர் குடித்து 9ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். இருவரும் மதியம் 12 மணியளவில் சோர்வாக இருந்தனர். சந்தேகமடைந்த ஆசிரியர் விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் சாணி பவுடர் (மயில்துத்தம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். உடனடியாக இருவரையும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா மற்றும் போலீசார் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் … Read more

ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

IND vs AUS, 1st T20I Score Updates in tamil: India vs Australia, 1st T20I: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இதில், அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ளும் முதலாவது டி-20 போட்டி பஞ்சாப் … Read more

“கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்களுக்கு கொடுங்கள்” – உணருமா தமிழக பள்ளிக் கல்வித் துறை?

சென்னை: தமிழக அரசுப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்போது பொது விவாதமாக மாறியுள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவது கல்வியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரையும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றுவதிலும் அரசு தரப்பில் தொடர்ந்து தயக்க நிலை நிலவுகிறது. மேலும், கிராமப்புறங்களில் இன்னமும் பல வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரே பாடங்கள் எடுக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. இத்துடன் பள்ளிக் கல்வித் துறையில், … Read more

ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக! – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஆம்னி பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பண்டிகைகளை சொந்த ஊருக்கு சென்று, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமென்ற நோக்கத்தில், நகர்ப்புறங்களிலிருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து, எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் பேருந்துகளில் பயணிக்கத் துடிப்பதும், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை … Read more

அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பதிவு தேனி சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து அறிக்கையளிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்த தேனி சார்பதிவாளரை, சஸ்பெண்ட் செய்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் வருவாய் … Read more

புதுப்பொலிவு பெறுகிறது காந்தி நினைவு அருங்காட்சியகம் -ரூ 2.12 கோடி செலவில் பணிகள் துவக்கம்

ரூ 2.12 கோடி செலவில் காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெறுகிறது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் 300 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் கழிவறை, லிப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல் கட்டமாக 3 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மதுரை சேர்ந்த … Read more

‘மதுரை தமிழ்ச் சங்க நூலகத்துக்கு 4 ஆண்டுக்கு முன்பு அறிவித்த ரூ.6 கோடி நிதி இதுவரை ஒதுக்கவில்லை’

மதுரை: ‘மதுரை உலக தமிழ்ச் சங்க புதிய நூலகத்துக்கு 4 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ரூ.6 கோடி நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை’ என உயர் நீதிமன்றத்தில் தமிழ்ச் சங்க இயக்குநர் தெரிவித்தார். மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி புத்தகங்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி புத்தகங்களை … Read more