மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் – இருளில் மூழ்கிய கிராமம்

திருச்சி அருகே பஞ்சாயத்து மின்கட்டணம் செலுத்தாதால் மின் ஊழியர் தெரு விளக்குகளை கழற்றிச் சென்றுள்ளார். இதனால் இரவில் தெருக்கள் இருளில் மூழ்கிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் ஆதனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள நாயக்கர் தெருவில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட வயதானோரும் வசித்து வருகின்றனர். திடீரென்று வந்த மின்சார ஊழியர்கள் இந்தப்பகுதி எந்தப் பஞ்சாயத்தின் கீழும் வரவில்லை என்றும், மின்கட்டணம் செலுத்தவில்லை எண்றும் கூறி தெரு விளக்குகளை கழற்றி சென்றுவிட்டனர். இது … Read more

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. வட்டி உயர்த்தியது மத்திய அரசு..!

நடப்பு (2022 – 2023) நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று (செப்.29-ம் தேதி) வெளியிட்டது. அதன்படி, சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் … Read more

“தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு அளித்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை இதுதானோ?” – தினகரன் காட்டம்

சென்னை: “தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தரமற்ற பொங்கல் … Read more

ஒன்பது மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (30.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01.10.2022: தமிழ்நாடு, … Read more

குன்னூரில் தொழிற்சாலையில் புகுந்து 2 கிலோ சாக்லேட்டை ருசி பார்த்த கரடி

குன்னூர்:  குன்னூரில் நேற்று அதிகாலை ஹோம் மேட் சாக்லேட் தொழிற்சாலையில் புகுந்த கரடி, 2 கிலோ சாக்லேட்டை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு மற்றும் கோவில்களில் உள்ள விளக்குகளில் ஊற்றும் எண்ணெய்யை குடிக்கவும் வருகின்றன. நேற்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள ஹைபீல்டு சாக்லேட் தொழிற்சாலை பகுதிக்கு … Read more

“பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் தரப்பு அவசரப்படுவது ஏன்?”- உச்சநீதிமன்றம் கேள்வி

அதிமுக விவகாரத்தில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் “அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவேண்டும், ஆனால் இந்தப் பொதுக்குழுவில் … Read more

தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்.. காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பு பேட்டி..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசிதரூரும் போட்டியிடுகிறார். இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய … Read more

“வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் தாஜ்மகாலை விஞ்சிய மாமல்லபுரத்தை மேலும் மேம்படுத்துக” – ராமதாஸ்

சென்னை: “வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை, மாமல்லபுரம் சிற்பங்கள் விஞ்சியுள்ள நிலையில் அதன் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ”2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இது பல்லவ வம்சத்தினரும், ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமை கொள்ள … Read more

எடப்பாடி செஞ்ச பெரிய தவறு… பொன்னியின் செல்வனாக மாறிய ஓபிஎஸ்!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதற்கிடையில் 3 மாதங்களுக்குள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தரப்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணமுராரி அமர்வு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள … Read more

டெரகோட்டா மனித முகம், பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் உள்ள வைப்பாற்றின் வடகரை மேட்டுக்காடு பகுதியில், கடந்தாண்டு பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையெடுத்து அப்பகுதிக்கு தொல்லியல்மேடு என பெயரிடப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கின. தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை … Read more