'பணிச்சுமை அதிகரிப்பு.. வருமானம் குறைவு' ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: வார ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டு புதிய விதிகளை சுவிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், இன்று காலை முதல் சுவிகி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தில்  பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது சுவிகி நிறுவனம் கொண்டு வந்த புதிய நடைமுறையில் புதிய ஊக்கத்தொகைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி … Read more

விடுமுறையால் பழநி, ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்

பழநி: வார விடுமுறை காரணமாக பழநி மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ஞாயிறு வார விடுமுறை தினம் காரணமாக நேற்று பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலையேறினர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் … Read more

தி.மலை: வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகைகள், ஒரு லட்சம் பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை என்ஜிஓ.நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் திரிபுரசுந்தரி. ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி வரும் இவர், கடந்த வெள்ளிக்கிழமை திண்டிவனத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதைக் … Read more

ஜல்லிக்கட்டு போட்டி விரைவில் விளையாட்டு போட்டியாக மாற்றம் – அமைச்சர் மெய்யநாதன்.!

ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு விளையாட்டாக விரைவில் மாற்ற சட்ட நடவடிக்கை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உலகத்திலேயே இல்லாத அளவிற்கு மதுரையில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அடுத்தகட்டமாக ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு போட்டியாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, ஜல்லிக்கட்டை … Read more

முழுமைத் திட்டமும் சென்னை பெருநகரும்: உங்களின் கருத்துகளை தெரிவிப்பது எப்படி?

சென்னை: சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தை (2027 – 2046) தயார் செய்யும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அனைத்து தரப்பு மக்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளது. முழுமைத் திட்டம் என்றால் என்ன? – ஒரு பெருநகரம் அடுத்த 20 ஆண்டுகளில் அடையும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நகரத்தின் உட்கட்டமைப்பு வசதி முதல் பல்வேறு அடிப்படை வசதிகள் … Read more

'நீயும் பறையன் மாதிரிதான்'… துரைமுருகன் சாதி குறித்து பெரியார் சொன்ன கதை…

விருதுநகரில் கடந்த 15 ஆம் தேதி சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழகம் முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். அந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4,041 கடிதங்கள் அடங்கிய 21,510 பணக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன் பெற்றுக்கொண்டார். அதேபோல, முதல்வர் … Read more

சூப்பில் 'ஈ' அதிர்ச்சி அடைந்த மருத்துவர். அலட்சியமாக பதில் சொன்ன பிரபல ஓட்டல்!

Flie in Soup: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அடையார் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் நேற்று மதியம் பிசியோதெரபி மருத்துவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார், அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன்பு சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளார், அதனை மருத்துவர் ஸ்பூன் மூலம் கிளறிய பொழுது சூப்பில் இருந்து “ஈ” ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்ட பொழுது … Read more

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேட்டுகடைக்கு சென்று அங்கிருந்து வெளியூர்களில் விற்று வருகின்றனர். இதனிடையே ஜிங்கல்கதிரம்பட்டி- மேட்டுகடைக்கு செல்லும் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் … Read more

பரந்தூர் விமான நிலையம்: அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் மக்களின் நியாயத்தை உணர்ந்து அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதற்காக சுமார் 4750 ஏக்கர் நிலம் கையகப்படுத்ததப்பட உள்ளது. இதில் குறிப்பிட்ட ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் மற்றும் நீர்நிலை மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 55 … Read more

சவுக்கு சங்கருக்கு ஒரு நியாயம், ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா? – என்ன கொடுமை சார் இது!

சவுக்கு சங்கர்… யூடியூப் பிரியர்களான இன்றைய யூத்களின் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர். பெயருக்கு ஏற்றாற்போல், பல்வேறு சமூக அவலங்களுக்கு தமது பேட்டிகளின் மூலம் சவுக்கடி கொடுத்து வருபவர். ஊடகங்களில் வெளிப்படுத்தும் பொட்டில் அடித்தாற் போன்ற தமது ஆணித்தரமான கருத்துக்களால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான சவுக்கு சங்கர், பிரபல யூடியூப சேனல் ஒன்றுக்கு அண்மயில் அளித்திருந்த பேட்டியே அவருக்கு வினையாக மாறிவிட்டது. கடந்த … Read more