தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு இன்று கூடுகிறது: தலைவர், தேசிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்க திட்டம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் மாநிலத்தலைவர் மற்றும் தேசிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டள்ளது. காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடைசியாக 2017-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர்கள் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, … Read more

வாழப்பாடி அருகே கோர விபத்து சென்னை பஸ் மீது லாரி மோதி தம்பதி உள்பட 6 பேர் பலி: பஸ்சில் சீர்வரிசை லக்கேஜ்களை ஏற்றிய போது சோகம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே நள்ளிரவில், ஆம்னி பஸ் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் தம்பதியின் பேத்தி மஞ்சள் நீராட்டு விழாவிற்கான சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தனியார் ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு சென்னை புறப்பட்டது. பஸ்சை ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் பரமேஸ்வரன் (50) ஓட்டிச் … Read more

காங்கிரஸ் தலைவர் பதவி.. பின்வாங்கும் கெலாட்.. அட இதுதான் காரணமா?

காங்கிரஸ் பேரியக்கம் நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை (செப்.18) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் இந்தத் தீர்மானம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இது அதிகாரப்பூர்வ தீர்மானம் அல்ல. இதற்கிடையில் ஒருநாள் முன்னதாக சனிக்கிழமை (செப்.17) காங்கிரஸின் பிரதேச கமிட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.400 பிரதிநிதிகள் கொண்ட இந்தத் தீர்மானம் … Read more

அக்னி தீர்த்த கடலில் மனைவிக்கு திதி கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!

இன்று காலை  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்த பின்னர், கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.  பிறகு, மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த பன்னீர்செல்வம் விஸ்வநாதர் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் அமர்ந்து ருத்ராபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்து … Read more

நமது இசை தெய்வத்தன்மை கொண்டது: டி.வி.கோபாலகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: நமது நாட்டின் இசை, தெய்வத்தன்மை கொண்டு விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய இசை, கலை அகாடமி சார்பில், பிரபல கர்னாடக இசைக் கலைஞர் ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஸ்வர்ண நவாதி’ என்ற நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. கடந்த 16-ம் தேதி நடந்த முதல்நாள் நிகழ்ச்சியில், டி.வி.கோபாலகிருஷ்ணனின் 42 பாடல்கள் அடங்கிய இசை குறுந்தகடு, அவரது புத்தகம் வெளியிடப்பட்டது. சிறந்த இசைக் கலைஞர்கள் 9 பேருக்கு ‘ஆச்சார்ய நவரத்னா’ … Read more

'ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலா எதிர்த்தவன் நான்' – கே.பி.முனுசாமி கர்ஜனை!

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். விழா மேடையில் கே.பி.முனுசாமி பேசியதாவது: “அம்மாவுடன்(ஜெயலலிதா) இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதிபாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன் நான். அம்மா(ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்த போதும் எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் … Read more

சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம்,  நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை  உருவாக்குவதாக உள்ளது. நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்கள் அப்பாற்பட்டவையா?  நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்களே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கமுடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும் தானே. ஆனால், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்.  அந்த வகையில் … Read more

ஆண்டாள் கோயில் யானை குளிக்க புதிதாக நீச்சல் குளம்: ரூ.11 லட்சம் செலவில் அமைப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், யானை குஷியாக குளித்து மகிழ்கிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெயமால்யதா என்னும் 19 வயது யானை உள்ளது. இது குளித்து மகிழ ரூ.11 லட்சம் செலவில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் யானை ஜெயமால்யதா தினசரி குளித்து மகிழ்கிறது. குளத்தில் யானை இறங்கியவுடன் அங்கும், இங்கும் … Read more

பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும்: சத்யராஜ் பேச்சு

திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா, தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் சுகந்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். … Read more

கடலூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலையால் மக்கள் அதிருப்தி.. !

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் தரமற்ற முறையில் ஊராட்சி சாலை அமைக்கப்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டிய கிராம மக்கள் சாலையை கைகளால் பெயர்த்தெடுத்தனர் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள், தரமான சாலை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். Source link