திண்டுக்கல்லில் தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியல; கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு ‘கடி’; ‘கு.க’ பணியை கூடுதலாக்க வேண்டும்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ெதரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு திண்டுக்கல் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க குடும்ப கட்டுப்பாடு பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் தினம்தோறும் நாய்களால் பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர். குறிப்பாக மக்கள் நெருக்கடி மிகுந்த … Read more

காட்பாடி : சொந்த வீட்டை விற்று விவசாயியாக மாறிய வங்கி அதிகாரி.!

சொந்த வீட்டை விற்று தரிசாக கிடந்த நிலத்தை வாங்கி பசுமையாக மாற்றி ‘அறிவுத்தோட்டம்’ எனப் பெயர் சூட்டி இயற்கை விவசாயம் செய்து வருகிறார், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர். அவரைப் பரிகாசம் செய்த உறவினர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி செந்தமிழ்ச் செல்வன். விவசாயிகள் உழவுத் தொழிலை கைவிட்டு வருவதை கண்கூடாகப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தார். உலகிற்கே உணவளிக்கும் உழவனே விவசாயத்தை கைவிட்டால் வரும் காலம் என்னாகும் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் … Read more

கோவில் நிலங்களை கையகப்படுத்த துடிக்கும் அண்ணாமலை… கே. பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 வது மாநில மாநாடு இன்று தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் … Read more

ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் – செல்லூர் ராஜூ பேச்சு!

அதிமுக சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தினமணி திரையரங்கம் பகுதியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், தொடர்ந்து பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே … Read more

கரூர் மாவட்டத்தில் மூலப்பொருள் விலை உயர்வால் பின் தங்கும் கொசு வலை தொழில்: உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலக்கம்

கரூர்: ஜிஎஸ்டி, மூலப்பொருட்களின் விலை உயர்வால் கரூர் மாவட்டத்தில் கொசு விலை தொழில் பின்தங்குகிறது. இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். கரூரில் டெக்ஸ்டைல், கொசு வலை மற்றும் பஸ் பாடி ஆகிய மூன்று தொழில்களிலும் கரூர் மாவட்டம் முதன்மையாக விளங்கியது. கரூரில் கொசுவலை நூல் மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 100 உள்ளன. அதே போல் நூல் உற்பத்தி செய்து கொசு வலையும் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 400 முதல் 500 வரை இருந்து வருகின்றன. ரூ.10 … Read more

ஓட்டுநர் உரிமம் வேண்டுமா? இப்படி செய்தால் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லாமலேயே உரிமம் பெறலாம்!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 58 வகையான பணிகளுக்கு இனி ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லத் தேவை இல்லை. ஆன்லைன் முறையிலேயே இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 வகையான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இதன்மூலம், வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் … Read more

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த விவகாரம்: கடைக்கு சீல்.. 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில், அண்மையில் யாதவர் சமூகத்தை சேர்ந்த கே. ராமகிருஷ்ணன் என்பவருக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் மீதான வழக்கு காரணமாக பணியில் சேர முடியவில்லை. இதையடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிவு … Read more

மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் – பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

விழுப்புரம்: மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் பாமக போராட்டத்தில் இறங்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பெரியார் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக தலைவர் அன்புமணி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்கத்தில் இடஒதுக்கீட்டு தியாகிகள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் கூறிய 7 … Read more

அதிமுக தொண்டர்களுக்கு ஜாக்பாட்: எடப்பாடி எடுத்த முடிவு!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே தன் பக்கம் நிர்வாகிகளை ஈர்க்க பசையாக கவனித்து வருகிறார் என்கிறார்கள். இதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள அவருக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. கடுமையான போராட்டத்துக்கு பின்னர், இடைக்கால பொதுச் செயலாளராக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள அவருக்கு சட்ட ரீதியாக பல்வேறு குடைச்சல்களை ஓபிஎஸ் கொடுத்து வருகிறார். பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வந்த தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் … Read more