பிடிஆருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்… அப்படியே அந்த ரெண்டு விஷயம்னு கேட்கும் உடன்பிறப்புகள்!

செல்வாக்கு: வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு என்ற பாணியில் எப்போதும் பேசுவதால், அமைச்சர் பிடிஆருக்கு திமுக உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. இதேபோன்று ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதி்ப்பு போன்ற துறைரீதியான விஷயங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிடிஆர் செம டஃப் கொடுத்து வருவதால், ஆட்சி நிர்வாகரீதியிலும் இவருக்கு அதிகாரிகள் மத்தியில் நல்லபெயர்தான். கட்சி தொண்டர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மத்தியில் பிடிஆருக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் செல்வாக்கே அவருக்கு வினையாக … Read more

முழு கொள்ளளவை தொட்டு 2 மாதமாக ‘கெத்து காட்டும்’ பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 2 மாதங்களை கடந்தும் முழு கொள்ளளவை தொட்டவாறு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த, பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிகுளம் அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் அவ்வப்போது திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததுடன், அதன் நீர்மட்டம் சரிந்தது. இதில், கடந்த மே மாதத்தில் 120 … Read more

சேலம்: தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் கிடந்த ஒடிஷா வாலிபர் உயிரிழப்பு

சேலம் ஓமலூர் அருகே வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் ரயில்வே டிராக்கில் விழுந்து கிடந்த நிலையில், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலையா அல்லது தற்கொலையா என சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியபட்டி கிராமத்தின் வழியாக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இன்று பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த … Read more

'வேத, இதிகாச எரிப்பு' போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை: ஸ்ரீரங்கத்தில் பெரியார் பிறந்த நாளான நாளை ‘வேத, இதிகாச எரிப்பு’ போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ரங்கராஜ நரசிம்மன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்.17-ல் தந்தை பெரியார் சிலை முன்பாக மனுதர்மம், வேதங்கள், ஆகமங்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் அதிகாரம் மற்றும் திக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு எப்போது சாத்தியமாகும்? தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பாட்டாளி மக்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல் துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் நாளை அணுசரிக்கப்பட உள்ள நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழகத்தில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல் துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் நாளை. இந்தியாவின் சமூக நீதி … Read more

உசிலம்பட்டி பகுதியில் முருங்கை, கத்தரிக்காய் அமோக விளைச்சல்: விவசாயிகள் மகிழ்ச்சி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் முருங்கைகாய் மற்றும் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதியில் பருத்தி, நெல், மக்காச்சோளம், மிளகாய், சோளம், கம்பு மற்றும் பயறு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. உசிலம்பட்டி பெரிய செம்மேட்டுப்பட்டி பகுதியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடி செய்திருந்தனர். தற்போது கத்தரிக்காய் மற்றும் முருங்கைகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கத்தரிக்காயை பறித்து விவசாயிகள் உசிலம்பட்டி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு … Read more

திருச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதா?-ஆய்வுசெய்ய ஆணையம் நியமனம்!

திருச்சி, திருவானைக் கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வின் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவானைகோவில் சேர்ந்த இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கணபதி நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற … Read more

Tamil news today live: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு கடிதம்

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒடிசா மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த … Read more

பேராசிரியை மீது நடவடிக்கை? – காவல் துறைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிராக புகார் அளித்த பேராசிரியை மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், மாந்திரீகங்கள் செய்வதாகவும் கூறி மற்றொரு பேராசிரியையான ரீட்டாஜான் என்பவர், பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக புகார் அளித்து … Read more

அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – அண்ணாமலை கடுமையான விமர்சனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என போராடி வந்தனர். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அவர்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினர், பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த கோரிக்கையை பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும் மத்திய அரசின் எஸ்.டி பிரிவின் பதிவாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.  இந்த … Read more