அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான போட்டி – தேர்வுக்கு முன்பே வெளியாக கேள்வித்தாள்!

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குரிய அறிவியல் வினாத்தாள் லீக் ஆனது. ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டியில் மற்றொரு ஆசிரியரே கேள்வித் தாளை லீக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடத் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை தேர்வு நேரத்தில் வழங்க வேண்டிய அந்த வினாத்தாளை இன்றே … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வல விண்ணப்பம் நிராகரிப்பு: உள்துறை செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல் துறையினருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபிக்கும் வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27-ம் தேதி நிராகரித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய … Read more

சசிகலாவுடன் எப்போது சந்திப்பு? ஓபிஎஸ் ஹிண்ட்!

அதிமுகவில் சசிகலாவை இணைக்கும் முயற்சிகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்த ஓபிஎஸ், ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு பிறகு, , டிடிவி ஆகியோருக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் நேரில் சென்றும் அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், அதிமுகவில் இருந்து எல்லோரும் வந்தாலும் சந்திப்பேன் என சசிகலா தெரிவித்துள்ளார். ஒற்றுமையாக செயல்பட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் ஓகே சொல்லி விட்ட நிலையில், மட்டும் தனது முடிவில் விடாப்படியாக இருக்கிறார். சசிகலாவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமி … Read more

சாலையை சீரமைக்க கோரிக்கை

காளையார்கோவில்: மதுரை  தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலிலிருந்து நடராஜபுரம் வரை  சுமார் 8 கிலோமீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலையை தான் மோர்க்குழி,  அய்யனார்குளம், அரியநாச்சி குடியிருப்பு, பனங்குடி, நடராஜபுரம் பகுதி  மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 20  வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பராமரிக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.  மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். … Read more

ஓரகடம்: சிலிண்டர் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து – குடியிருப்புகளுக்கும் பரவிய தீ!

ஒரகடம் அருகில் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் சேமிப்பு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று மாலை பலத்த சத்தத்துடன் வெடித்து தீ பரவி உள்ளது. சிலிண்டர் குடோனுக்குள்ளே இருந்து பரவிய தீ மளமளவென குடோனுக்கு வெளியேவும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் குடோன் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. சம்பவம் நடைபெற்ற … Read more

மதுரை மாநகராட்சி பொறியாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட அரசு: திரும்பி வந்த ‘அரசியல்’ பின்னணி

மதுரை: திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுரை மாநகராட்சியில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மாநகராட்சி பொறியாளர் (பொ) அரசு, தற்போது மீண்டும் மதுரை மாநகராட்சி பொறியராளராக (பொ) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திரும்பி வந்ததின்பின்னணியில் அரசியல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி பொறியியல் துறையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் என்ற அடிப்படையில் பணி நிலைகள் உள்ளன. கடந்த காலத்தில், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சியில் மட்டுமே பொறியியல் பிரிவில் தலைமை … Read more

இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்த கூடாது – அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களின் கூட்டம், போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து கழகங்கள் சார்பாக … Read more

சாலைகளில் உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டுனர்கள் அவதி: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பழநி: பழநி சாலைகளில் உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இறங்கி, பழநி கோயிலுக்கு செல்ல பயன்படுத்தக் கூடிய முக்கிய வாகனமாக குதிரைவண்டி உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் குதிரைவண்டி பயணம் பழநியில் … Read more

தூத்துக்குடி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை சோதனை செய்ய சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை சோதனை செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே குடோன் மற்றும் கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், கேரி பேக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

அக்.2 – சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் பங்கேற்க வேண்டும்: திருமாவளவன் அழைப்பு

சென்னை: “அக்டோபர் 2 அன்று நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று அரசியல் கட்சிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அக்டோபர்- 02 ஆம் நாள்- காந்தி பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியம், நகரம் மற்றும் மாநகரத் தலைமையிடங்களில் சுமார் 500 இடங்களில் ‘சமூக நல்லிணக்கப் பேரணி’ நடத்துவதென ஏற்கெனவே செப்-24 அன்று … Read more