அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டர். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகியபோது, விசாரணை குறித்து தகவல்கள் முறையாக … Read more

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிடுக! – அன்புமணி வலியுறுத்தல்!

சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது: திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் மிகுந்த … Read more

கலைஞரின் பேனாவால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் – ஜெயக்குமார் கவலை

மின்கட்டண உயர்வை திரும்ப  வலியுறுத்தி அதிமுக  வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை பாடியும் தொண்டர்களை பாடவைத்தும் உற்சாகமூட்டினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் … Read more

பண்டிகைகள் நெருங்கி வருவதால் சின்னாளபட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி தீவிரம்: சீரியல் பெயர்களிலும் தயாராகுது புடவைகள்

சின்னாளபட்டி:தீபாவாளி உள்ளிட்ட பண்டிகை நெருங்கி வருவதால், சின்னாளபட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. சின்னாளபட்டி  சுங்குடி சேலைக்கு பிரசித்தி பெற்ற ஊராகும். இதனால், சுங்குடி நகரம்  எனவும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள்  மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சுங்குடி சேலைகள்  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு  வட்டம் மற்றும் சதுர வண்ண புள்ளிகளை சேலைகளில் பதித்து சுங்குடி சேலை என  பெயர் வைத்து விற்பனை செய்து வந்தனர். வயதானவர்கள் … Read more

திண்டுக்கல்: கைக்குழந்தையை வைத்தபடி பேருந்து நிலையத்தில் மதுஅருந்திய பெண்ணால் பரபரப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒருமாத கைக் குழந்தையுடன் மது போதையில் தள்ளாடித் திரிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திண்டுக்கல் மாநகர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கையில் வைத்தபடி மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இதைபார்த்த அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் பேருந்து நிலைய … Read more

7.5% இடஒதுக்கீடு – ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள்’

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 455 இடங்கள் கிடைக்கும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “2022-23ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு 121 அரசு கல்லூரிகளில் 2,526 இடங்களுக்கும், … Read more

9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு … Read more

கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

கீழடி: தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை … Read more

கொந்தகை ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் நெல்மணிகள் படையல் கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை புதைவிட தள ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் முதல் முறையாக நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கொந்தகை புதைவிட தளத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்த போது 74 சூது பவள மணிகள் கிடைத்தன. புதைவிட தள ஆய்வில் முதன் முதலாக இவை கிடைத்துள்ளன என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் … Read more

ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் – ஹெச்.ராஜா காட்டம்

ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும், இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ஆதாரங்கள் இல்லை. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக கட்சி அல்லது பிரதமரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை விமர்சனம் செய்யுங்கள். அதற்காக தேசத்தை எதிர்ப்பேன் இந்து மதத்தை எதிர்ப்பேன் என்பது ஏற்றுக்கொள்ள … Read more