மகன் தற்கொலை செய்துக்கொண்டது தெரியாமல் அவரது உடலுடன் 3 நாட்களாக உணவருந்தாமல் தவித்த மனநலம் குன்றிய தாய்

கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட மகனின் உடலுடன் பூட்டிய வீட்டிற்குள் தவித்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாயை 3 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர். திருமணம் ஆகாத 43 வயது சிபி சுப்பிரமணியம் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயாருடன் ஸ்ரீவல்லி நகரில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்குள் மகன் தற்கொலை செய்துக்கொண்டது கூட … Read more

'நம்மை காப்போம் – 48' திட்ட செயல்பாடு; மதுரை அரசு மருத்துவமனை முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

மதுரை: விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் ‘நம்மை காப்போம்-48’ மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடம் வகித்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது … Read more

நுண்ணூட்ட பொருட்கள் வாங்கினால் தான் யூரியா, டிஏபி விற்பனை – விவசாயிகள் கவலை

நுண்ணூட்ட பொருட்கள் வாங்கினால் தான் யூரியா, டிஏபி உரங்கள் விற்கப்படும் என திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக் கடை விற்பனையாளர்கள் கூறியுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், பயிர்களுக்கு இடக்கூடிய மிக முக்கியமான உரங்களான யூரியா, டிஏபி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான உரக்கடைகளில், 400 முதல் 500 ரூபாய் மதிப்பிலான நுண்ணூட்ட பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா, டிஏபி போன்ற உரங்களை தர முடியும் … Read more

அங்க விமர்சனம்…. இங்க வரவேற்பு… லெஜெண்ட் சரவணன் 3 நாளில் செய்த சாதனை

தனது கடை விளம்பரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடனமாடி விளம்பரத்தை ஹிட்டாக்கிய அருள் சரவணன், சினோ முதல் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பத்தில் ஆட்டம் போட்டுள்ளார். . தனது கடை விளம்பரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய அருள் சரவணன் தற்போது சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். … Read more

எண்ணெய் விலை உயர்ந்தும், திருப்பூர் சூரியகாந்தி விவசாயிகளுக்கு நஷ்ட்டம்.!  

திருப்பூர் மாவட்டம் : ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமையல் எண்ணெய் விலைகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.   இதனை அடுத்து, கடந்த … Read more

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு | 6 கி.மீ வரை உள்ள மாணவர்களை சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர்கள் ஏ.கோபால், டி.சரவணன். இவர்கள் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களது மகன்களுக்கு மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் சீட் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் … Read more

மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவிடுவோர் கண்காணிக்கப்படுகின்றனர் – சென்னை கமிஷனர்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள சர்வதேச செஸ் போட்டி நடைபெற இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ‘’பிரதமர் வருகையை ஒட்டி நேரு உள்விளையாட்டு … Read more

தனி சிங்கத்தை கண்டுபிடிக்க சவால்… மேதைகளால் மட்டுமே முடியும்… உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் ஒரு சூறாவளி போல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கங்கள் கூட்டமாக இருக்கிறது. இதில் தனி சிங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். உண்மையில், இந்த விலங்கு அடிப்படையிலான ஆப்டிகல் இல்யூஷனில் தனி சிங்கத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானது. தனி சிங்கத்தை புதிர்களை விடுவிக்கும் மேதைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். … Read more

பாம்பு தீண்டி மரணித்து பாலியல் அரக்கனை அடையாளம் காட்டிய சிறுமி..! வீடியோ எடுத்தவர்களும் சிக்கினர்

திருவள்ளூர் மாவட்டம் எருமவெட்டி பாளையத்தில்  8 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் , 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம், 75 வயது முதியவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியானதால் முதியவர் உள்ளிட்ட 5 பேர் கும்பல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை தாய் விட்டுச்சென்ற நிலையில் தந்தையும் உயிரிழந்ததால். திருவள்ளூர் மாவட்டம் எரும வெட்டி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து … Read more

“ஆட்சியாளர்கள் சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது நல்லதல்ல” – தங்கமணி

திருச்சி: “போக்குவரத்தும், மின்சாரமும் மக்களுக்கான சேவைத் துறை. எனவே சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில், திருச்சி அண்ணாசிலை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் … Read more