தாங்கள் படித்த பள்ளியின் நலனுக்காக 80s மாணவர்கள் செய்த செயற்கரிய செயல்!

திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.7 லட்சம் செலவில் 2 கூடுதல் வகுப்பறைகளை முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1984-85 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 80 பேர் சந்திப்பு கூட்டம் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் ரூ.7 … Read more

ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்னையா? போட்டோ எடுக்கமுடியலையா? இதை செய்து பாருங்க!

இன்றைய சூழலில் ஃபோன் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்பு என அனைத்துக்கும் ஃபோன் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஸ்மாட்ஃபோன் நிறுவனங்களும் மக்களின் தேவைக்கு ஏற்ற சிறப்பு வசதிகளுடன் ஃபோனை அறிமுகம் செய்கிறது. விலைக்கு ஏற்ப வசதிகளும் மாற்றியமைக்கப்படுகிறது. விலைக்கு ஏற்ப ஃபோன் ஸ்டோரேஜ், கேமரா வசதி, உயர் தர மென்பொருள் எனப் பல வசதிகள் இருக்கும். ஆனால் சில சமயம் விலையுயர்ந்த போன் வாங்கி, ஸ்டோரேஜ் வசதி அதிகம் இருந்தாலும், நமக்கு ஸ்டோரேஜ் … Read more

சென்னையில் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி.! வெளியானது அறிவிப்பு.!

தமிழ்நாடு முழுவதும் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி, நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒத்தார்கள் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் மட்டும் 27-ந் தேதி (புதன்கிழமை) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் இதற்கான … Read more

டெல்லியில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் குடியரசு தலைவர், பிரதமருடன் பழனிசாமி சந்திப்பு

சென்னை / புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு டெல்லியில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட பிரிவு உபசார விழா விருந்தில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார். குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில், பிரிவு உபசார விழா விருந்து டெல்லியில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டது. அதில் பங்கேற்க பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தொடரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை: வைகோ கண்டனம்

சென்னை: இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்து எழுந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்நாட்டு அரசு இயந்திரம் நொறுங்கிக் கிடக்கிறது. ஆனால் சிங்கள கடற்படையினர் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைப்பதும், … Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி – பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை உத்தரவு இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. … Read more

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று (ஜூலை 23) பல பகுதிகளில் மழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு, நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

"மரம் வளர்த்தால், இலவச மின்சாரம்" ஜார்க்கண்ட் மாநிலம் போல் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டிய திட்டம் –  மருத்துவர் இராமதாஸ்.!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார்.  சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது! புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது  மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் … Read more

நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமையடைகிறது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமையடைகிறது என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி … Read more

அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழப்பு

மேட்டூர் அருகே அனுமதி இன்றி விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஆலமரத்துப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட கூழ் கரடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன் என்ற புஷ்பநாதன், இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், தோட்டத்திற்கு அருகே காப்புக்காடு இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகள் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை தடுக்க நிலத்தின் அனுமதி இன்றி … Read more