முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

Stalin tests positive for corona: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் … Read more

நீட் விலக்கு மசோதா.. தகவலை தர முடியாது – ஆளுநர் மாளிகை.!

தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறும் வகையில் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் … Read more

பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு ? போலீசார் தீவிர விசாரணை.!

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில், பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட விஜய குமார், பிரதீபா தம்பதியர் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது “டீ பார்” என்ற உணவகத்தில் வொயிட் பாஸ்தா சாப்பிட்டுள்ளனர். இரவு பிரதீபாவுக்கு உணவு செரிக்காமல் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரதீபாவின் தந்தை தனது மகளுக்கு உணவில் … Read more

“எல்.முருகனை புறக்கணிப்பது ஏன்?” – பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் பொன்முடிக்கு தமிழக பாஜக கேள்வி

சென்னை: “எல்.முருகனுக்கு அடுத்து பேசுவது கவுரவக் குறைவு என்று அமைச்சர் பொன்முடி எண்ணுகிறாரா?” என்று மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றைப் பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே … Read more

குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யும்முன் சாட்டை முருகனுக்கு நீதிபதி சொன்ன அறிவுரை!

யூ-டியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக, துரைமுருகன் என்கிற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் … Read more

உதயநிதியை பிழிந்து எடுக்கிறாராம் அவர்… மகிழ்ச்சி தெரிவிக்கும் கிருத்திகா!

Kiruthiga happy about Udhayanidhi stalin difficult work in movies: என்னால் முடியாததை இயக்குனர் மாரி செல்வராஜ் செய்கிறார், அவர் உதயநிதியை நன்றாக பிழிந்து எடுக்கிறார் என உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அப்பாவாக வடிவேலு நடிக்கிறார். பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்து வருகிறார். இதையும் படியுங்கள்: கையில் … Read more

அனைத்து கட்சி கோட்டம் – மத்திய அரசு அழைப்பு.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவே பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டமாகும். மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை  முன்னிட்டு வருகின்ற 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி … Read more

நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை வெட்டிக்கொலை செய்த லாரி டிரைவர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த லாரி டிரைவர் உறவினருடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செட்டிமல்லன்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் – கற்பகவல்லி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வேல்முருகன், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்றிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், உறவினர் பிரேம்குமாருடன் இணைந்து, மனைவி கற்பகவல்லியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். … Read more

ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடக் கூடாது என மீன் வலை உற்பத்தி நிறுவன நிர்வாகிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர்கள் செய்த செயலால் அதிர்ச்சி -3 பேர் கைது

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் அருகருகே இரண்டு தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களக்கு விற்பனை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை … Read more