கையை விட்டு போகும் அதிமுக; எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றம் நிகழ்ந்தது. இறுதியாக பாஜக தலையீட்டால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக வந்தது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையே இவர்கள் இருவரும் தங்களுக்குள் பனிப்போர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது. இதன் எதிரொலியாக தன்னுடன் சேர்ந்து பயணித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுக்க முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் … Read more

Tamil News Update: சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்.. இளைஞர் கைது

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட, 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இதுதொடர்பாக, போதை பொருள் கடத்தி வந்த இளைஞனை சுங்கத்துறையினர் விசாரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், … Read more

வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்ப்பு | நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை முழு விவரம்

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக கடந்த 2011 முதல் 2021 வரை பதவி வகித்தவர் கே.பி.பி.பாஸ்கர். தற்போது நாமக்கல் நகர அதிமுக செயலாளராக உள்ளார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு, மோகனூர் சாலை அசோக் நகரில் … Read more

தமிழ்நாட்டில் பொருளாதார புரட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

மகளிருக்கான இலவச பேருந்து சேவை மூலம் அந்தக் குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 விழுக்காடு சேமிப்பு கிடைக்கிறது என்பது ஒரு பொருளாதாரப் புரட்சி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று (12.8.2022) சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் மாநிலத் திட்டக் குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் … Read more

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் – ஆந்திர அரசின் முடிவால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர் மாவட்டம் வழியாக பூண்டி ஏரியில் கலக்கிறது. இந்த ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை சித்தூர் பகுதியில் அணை கட்டி ஆந்திர மாநில அரசு தடுத்து தேக்கியுள்ளது. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் 2 இடங்களில் புதிய அணை கட்டுவதற்காக 177 கோடி ரூபாயை அம்மநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. … Read more

அடுத்த ஆண்டுக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படும் – சென்னையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, டெல்லி – வாரணாசி இடையே இயக்கப்பட்டு … Read more

ரஜினிகாந்த்தின் திடீர் தேசப்பற்று..!- வீட்டில் ஏற்றப்பட்ட தேசிய கொடி..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது விவாதப்பொருள் ஆகியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் படியும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் … Read more

பெண்களுக்கான சலுகை பயணத்தால் வருவாய் பற்றாக்குறை – உதிரிபாக கொள்முதலுக்கு நிதியின்றித் திணறுகிறதா மாநகர போக்குவரத்துக் கழகம்?

சென்னை: பெண்களுக்கான சலுகைப் பயணத்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், உதிரி பாகங்கள் வாங்குவதற்குக் கூட போதிய நிதியின்றி நிர்வாகம் திணறிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்தவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்கள் வரவேற்பு இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பேருந்துகளில் பயணிக்கும் … Read more

“திராவிட மாடலில் இருந்து தேசிய மாடலுக்கு திமுக வந்திருக்கிறது” – தமிழக பாஜக

மதுரை: “இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் கவுரவிக்க முந்தைய அரசுகள் மறந்துவிட்டன. ஒரு சிலரால் மட்டும் சுதந்திரம் அடைந்ததாக பேசுகின்றனர்” என பாஜக அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம் கூறினார். தமிழக பாஜக ராணுவப் பிரிவு, பிரசாரப் பிரிவு, கல்வியாளர் பிரிவு, விளையாட்டு பிரிவுகள் சார்பில் மதுரை மாவட்டத்தில் விடுதலை வீரர்கள் வீர வணக்க ரத யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரையை மதுரை பாண்டிகோவில் மஸ்தான்பட்டி ரிங்ரோட்டில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம் இன்று … Read more

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி – தொலைபேசி கட்டண விவகாரம்: ஈஷா விளக்கம்

சென்னை: தொலைபேசி பயன்பாட்டு விவகாரத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டண விதிப்பு குறித்து ஈஷா விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈஷா அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், “டிசம்பர் 2018-ஆம் ஆண்டு, ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ.2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தவறாக பில் அனுப்பி இருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் … Read more