காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு விதிமீறி இரவில் கேரட் அறுவடை செய்ய நிர்பந்திக்கும் ஏஜென்டுகள்

உயிரை பணயம் வைத்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்; நடவடிக்கை பாயுமா? குன்னூர் : நீலகிரியில் இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய கலெக்டர் தடை விதித்துள்ள நிலையில் இதை மீறி சில தோட்ட ஏஜென்டுகள் தொழிலாளர்களை நிர்பந்தம் செய்து இரவில் பணிக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், மனித, விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக  … Read more

போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு நடத்திய பரிசோதனையில் அவர் போதை பொருள் உட்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. கேளிக்கை நிகழ்ச்சியில் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் கலந்து கொண்டது தொடர்பான வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் சன்னா மரின் கலந்து கொண்டு மது அருந்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இந்த நிகழ்ச்சியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சன்னா மரீனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் தான் மது அருந்தியதாகவும், ஆனால் … Read more

15 நாட்களுக்குள் செய்துவிடுங்கள் : ஸ்டாலின் போட்ட உத்தரவு

தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய பிரச்சினைகளை தொகுத்து அந்த பட்டியலை  எம்.எல்.ஏக்கள் அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ”இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் ஐந்து புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் … Read more

ரயில்வே சேவையில் திடீர் மற்றம் -தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்..!

 தெற்கு ரயில்வே  முன்பதிவு இல்லாத பயணியர் பயன் பெறும் வகையில், 24 விரைவு ரயில்களின் சேவையில், மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: முன்பதிவு இல்லாத பயணியர்களின் எண்ணிக்கை தெற்கு ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில், அதிகரித்து வரும் நிலையில், பயணியர்கள்  பயன் பெறும் வகையில், தேர்வு செய்யப்பட்ட 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்களின் தடத்தில், ஒரு பகுதியில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படும். … Read more

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளான நிலையில், பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து சுற்றுலா பயணகள் மீட்க்கப்பட்டனர். குஜராத்  மாநிலத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டம்டம் பாறை அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக பேருந்து பிரெக் பிடிக்காததால், பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து, பேருந்துக்கு உள்ளே இருந்த சுற்றுலா … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளுமா?: டிடிவி தினகரன்

சென்னை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன. செப்டம்பர் … Read more

உதயநிதியுடன் கமல் நெருக்கம்: திமுகவுடன் டீல் பேசும் மநீம!

பாஜகவுக்கு ரஜினிகாந்த் மட்டுமல்ல வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை தோற்கடித்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமோ, பக்கம் சாய்ந்து வருவதாக தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பணிகளை தொடங்கி விட்டன. 2024 தேர்தலிலும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் என்று அமித் ஷா சூளுரைத்துள்ளார். … Read more

கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை – பழிக்குப் பழியா ?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த 15 வருடங்களாக ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர். தற்போது இவரது மனைவி திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து இருந்த பொன்ராஜ்ஜை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்துள்ளனர். ஏதோ அசம்பாவிதம் அரங்கேறப் போகிறது என்பதை சுதாரிப்பதற்குள் அவர்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு … Read more

கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் ஆய்வு

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், அறிவுசார் மையம் மற்றும் கோடப்பமந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து … Read more

`பாலியல் புகாருக்குள்ளான நபரின் கீழ் பணியாற்ற முடியாது’- கடிதம் கொடுத்த பிற பேராசிரியர்கள்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என 17 பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை … Read more