ஆதித்ய கரிகாலன் முதல் குந்தவை வரை… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தை குறிப்பிட்டு நடிகை த்ரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரம்மாண்ட வரலாற்று புதினங்களில் ஒன்றான் பொன்னியின் செல்வன் கதையை பல கட்ட முயற்சிகளுக்கு பின் இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். 2 பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் … Read more

நீலகிரி.! இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.!

நீலகிரியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அத்தியூர்மட்டம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் கார்த்திக்(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.  இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்த பிறகு இரவு வீட்டிற்கு வந்த தந்தை வீட்டின் அறையில் கார்த்திக் தூக்கு போட்டு தொங்கிய … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணிக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் ?, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் யார் கையெழுத்திடுவது? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

”சொத்தில் பங்குதராமல் ஏமாற்றிவிட்டனர்” – நடிகர் பிரபு ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு

தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டி அவர்களது சகோதரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் … Read more

திருமணத்திற்கு முன்பு ‘உறவு’ தப்பே இல்லையாம்: தமிழ்ப் பட நடிகை ஷாக்

தமிழில் கடந்த 1999-ம் ஆண்டு அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே படத்தின் மூலம் அறிமுகமானவர் தியா மிர்ஸா. அதன்பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நாயகியாக நடித்த இவர், ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு வெப் தொடர்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம், வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்ட தியா மிர்ஸாவுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள … Read more

அடுக்கடுக்கான கேள்விகள்., திணறிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு… அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி ஏழுப்பினார். ஓபிஎஸ் தரப்பு : கட்சி சட்டவிதிமுறைகள்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டும் என்று … Read more

“தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என … Read more

சென்னையில் 3,000 செல்போன் டவர்களுக்கு வாடகை பெறுவோரிடம் இனி புதிய முறையில் சொத்து வரி வசூல்

சென்னை: சென்னையில் 3,000 செல்போன் டவர்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாயை உயர்த்த இந்த முடிவை எடுத்துள்ளது. நகர்புறங்களில் பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும். இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த … Read more

நண்பன் ’இலியானா’ பாணியில் பிரசவம்.. இரட்டை கருவை சுமந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்!

வாணியம்பாடியில் இரட்டை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக கணவர் குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20). கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான இவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் இரட்டை பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது சிறிது நேரத்திலேயே சங்கிரி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் … Read more