விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (21). இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) கீர்த்தி (18) சத்தியன் (17) வீரமணி (18) ஆகியோர் … Read more

ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்… குரல் கொடுத்த முதல் தமிழ் நடிகை :  நெட்டிசன்கள் பாராட்டு

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிக்கு ஆதரவாக நடிகை பிரியா பவானி சங்கரின் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டாலுமு் மாணவியின் மரணத்தில் … Read more

அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல தொண்டர்களுக்கு ஒரு மாத கால தடை ஏன்? – ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் விளக்கம்

சென்னை: “உயர் நீதிமன்றத்தில் சுவாதீனங்கள் குறித்து வாதங்கள், ஆவணங்கள், முன்வைக்கப்படாத சூழ்நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரங்களை நீதிமன்றம் தனது அதிகாரமாக பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்த தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. இது மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு” என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீரப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக … Read more

சென்னை: ஏரியில் இருந்து கிளம்பிய கரும்புகை – காரணம் தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு

பல்லாவரம் ஏரியில் இருந்து கரும்புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பாலத்திற்கு அருகே பக்கவாட்டில் ஏரிக்கு அடிப்பகுதியில் இருந்து கடும் கரும்புகை வெளியாகி வருகிறது. புகை வெளியாவதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமிக்கடியில் புதைவட கேபிள் தீப்பிடித்துள்ளதா எனவும் பார்த்து வருகின்றனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஏரிக்கருகே இருந்து கரும்புகை வெளியாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தென் சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு: புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடக்கம்

சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சென்னை நகருக்கு இலகுவாக பயணிப்பதற்காக மெட்ரோ ரயில் பாதை அமைக்கவிருக்கிறது. இது, கோவிலம்பாக்கத்தில் உயர்மட்ட வழித்தடத்திற்கான கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளதால்,  மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப்பணி தொடங்கியுள்ளன.  11.6 கிமீ உயரமான மெட்ரோ நடைபாதையை புழுதிவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை அமைப்பதற்காக, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) மூலம் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் – கே.இ.சி. இன்டர்நேஷனலிடம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் … Read more

தேர்தல் முன்விரோதம்., திமுக பிரமுகரை சம்பவம் செய்த அதிமுக பிரமுகர் தலைமறைவு.!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள மலைக்கோடு பகுதியைச் சேர்ந்த தாஸ் என்ற தி.மு.க., பிரமுகருக்கும். அதே பகுதியை சேர்ந்த ஸ்டான்லி என்ற அ.தி.மு.க. பிரமுகருக்குமிடையே கடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.  இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த ஸ்டான்லி, தாசை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த தாஸ்-யை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

தமிழகத்தில் செப்.1 முதல் குறுவை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்: டெல்டா விவசாயிகள் வரவேற்பு

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . குறுவை நெல் அறுவடை செய்தால் அதை வழக்கமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தான் புதிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு … Read more

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாயிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஒற்றைத் தலைமை விவாகரம் தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், காவல்துறை போதிய … Read more

5 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர்-தனியார் நூற்பாளையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சேலத்தில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர், தனியார் நூற்பாலையில் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், நான்கு நாட்களாக ஊழியர்கள் நடமாட்டம் இல்லாததால் இளைஞர் உயிரிழந்தது தெரியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.   Source link

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கூடுதலாக 25,000 ஹெக்டேரில் நெல் நடவு: அமைச்சர் தகவல்

ஈரோடு: “மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால், இந்த ஆண்டு கூடுதலாக, 25,000 ஹெக்டேர் நிலத்தில் நெல் நடவு நடந்துள்ளது” என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை … Read more