உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது நடவடிக்கை: ஆளுனரை சந்தித்து அண்ணாமலை புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களுடன் சென்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் என்.ரவியை வியாழக்கிழமை (ஜூலை 21) சந்தித்தார். அப்போது, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியிடம், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி … Read more

#விருதுநகர் || அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம்.!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆத்திபட்டி அருகே பேருந்து சென்ற போது, முன்னாள் சென்ற டேங்கர் லாரி ஒன்று நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் … Read more

‘நிதிக் காரணத்தால் காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டம் நிறுத்தமா?’ – உயர் நீதிமன்றம் காட்டம்

மதுரை: நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டத்தை நிறுத்தியதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா 2-ம் அலையின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதலில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக விசாரித்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ … Read more

'17 ஆண்டுகளாக அந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் பிரச்னைதான்! போராட்டம்தான்!' – முத்தரசன்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்திருக்கும் இச்செயல் புதிது அல்ல. 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த … Read more

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம்: இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

ஒரு நாளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இந்நிலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்திகொள்ளலாம். வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இதில் இற்கையான இனிப்பு இருப்பதால் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது. இதில் நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை என்பதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம், மெக்னீஷியம் ரத்த அழுத்தத்தை … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், … Read more

“கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்பட விடமாட்டோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவிடைமருதூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்குப் படிப்பில் சுணக்கம் வந்து விடக்கூடாது என அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவிடைமருதூர் வட்டம், மதகுசாலை, கொள்ளிடம் ஆற்றில் அடித்த செல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கும், மீட்கப்பட்டவரை நேரில் சந்தித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: “ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருகி … Read more

'குழந்தைகள்முன் பெற்றோர் நட்புடன் நடந்து கொள்ளுங்கள்'- பிரிந்துவாழும் தம்பதிக்கு அறிவுரை

”குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது முக்கியமானது” என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில், ”தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம்தான் திருமணம். அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய … Read more

ஜூலை 23, 24-ல் சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: மருத்துவம் படிக்க குவியும் மாணவர்கள்

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் உக்ரைன்-ரஷ்யாவிற்கு இடையேயான போரின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.  இதனால் சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் மருத்துவப் படிப்பிற்கான உகந்த இடம் இல்லை என உலகமக்களினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆண்டின் மருத்துவ துறையின் அட்மிஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5,000 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் 50% ஆக அதிகரித்து 2022-23இல் 7,500 ஆக … Read more

ஈரோடு.! கிரேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் கிரேன் வண்டி மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக … Read more