“சூர்யாவுக்கு வாழ்த்துகள்… மத்திய அரசுக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை: ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சூரரைப் போற்று படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த படத்துக்கான விருது, சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது , அபர்ணா பால முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது, ஜி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான … Read more

போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு..!!

யூடியூப், கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வீடியோ பகிரும் தளமாகும். இந்த தளத்தில் தினமும் ஆயிரக்கணக்கிலான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானது. லட்சக் கணக்கிலான இந்திய பயனர்கள் இதில் வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை … Read more

வகுப்பறையின்றி மரத்தடியில் பாடம் நடத்தும் 2,500 பள்ளிகளுக்கு கட்டிடங்கள்: அன்பில் மகேஸ் உறுதி

ராமநாதபுரம்: தமிழகத்தில் வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் 2,500 பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி கற்ற வயது வந்தோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை … Read more

சுகர், தாம்பத்யம்… 3 முக்கிய நன்மை இருக்கு; முருங்கை இலையை ஆண்கள் மிஸ் பண்ணாதீங்க!

முருங்கை இலையில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. குறிப்பாக இது ஆண்களுக்கு மிகவும் நன்மை தருகிறது. ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் நோய்க்கு இது மருந்தாக செயல்படுகிறது. முருங்கை இலையில் காணப்படும் சில சத்துக்கள் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் நோய்யை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் இதில் இருக்கும் பாலிபினால்ஸ், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் விலங்களிடத்தில்தான் இந்த ஆய்வுகள் நடத்தப்படிருந்தாலும் மனிதர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எலிகளிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அதன் விந்தனு உத்பத்தியை முருங்கை இலை … Read more

“தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்; ரூ.3-க்கு டிம்பர் மரக்கன்றுகள் விநியோகம்” – காவேரி கூக்குரல் இயக்கம்

சென்னை: காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூலை 22) கூறியது: ”2019-ம் ஆண்டு சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் … Read more

’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாம..’’ – காவல் உதவி ஆப் அறிமுக நிகழ்ச்சியில் எஸ்.பி அறிவுரை

’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாமல் வெளியே போனீங்கன்னா..படிக்க மாட்டேன்னு சொல்லணும்’’ என்று சொல்லவேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் நடைபெற்ற “காவல் உதவி ஆப்” அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களையும் புகார்களையும் எளிதில் காவல் நிலையங்களில் தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் “காவல் உதவி ஆப்” என்ற ஆப்பை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனையடுத்து மாவட்ட வாரியாக … Read more

சேலம் தொப்பூர் கணவாய் பகுதியில் இரண்டு லாரிகள் கவிழ்ந்து விபத்து.!

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் ஆந்திராவில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு லாரியில் சிமெண்ட் கிண்டர்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.  அப்போது தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி அருகே லாரி வந்த போது முன்னால் சென்ற டீசல் டேங்கர் லாரியின் மீது மோதியதில் இரண்டு லாரிகளும் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் இரண்டு லாரி ஓட்டுனர்களும் உடன் வந்தவர்களும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ … Read more

2021-22 ஆண்டில் தமிழகத்தில் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: இந்திய அளவில் 2வது இடம் 

சென்னை: 2021-22-ம்ஆண்டில் தமிழகத்தில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தைகள் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கிளின் கல்வியைத் தொடர முடியாத ஏற்பட்டது. குறிப்பாக, சாலையோரம் … Read more

ஆடி மாசம் வந்துட்டா போதும்…. ரோசாவ கைலயே புடிக்க முடியாது… சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகினறனர். அதேபோல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசியல். சினிமா மற்றும் உலக நிகழ்வுகளை பற்றி மீம்ஸ் பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளனர். பெரிய ஆக்ஷன் அல்லது சீரியஸ் காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகரின் … Read more

புதுச்சேரியில் அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி விற்பனை: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: “வீடுதோறும் கொடியேற்ற அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேயில் ஆகஸ்ட் 13 … Read more