IND VS WI: தொடரை வென்ற இந்தியா.. சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 -1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் … Read more

மறைமலைநகர் | பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதி விபத்து: 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

மறைமலைநகர்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி தேன்மொழி (26). இவர்களுக்கு சித்தார்த் (4), லோகேஷ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேன்மொழி இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் லேசாக உரசி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது போதியது. இதில் … Read more

சத்தியமங்கலம்: வனத்துறை வைத்த கூண்டில் wanted ஆக வந்து சிக்கிய ஆண் சிறுத்தை

சத்தியமங்கலம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த … Read more

எழும்பூர், பெரம்பூர், தாம்பரம்.. சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை

எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணியின் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர்: பூந்தமல்லி உயர் சாலையின் கீழ்ப்பாக்கம் காவல் நிலையக் குடியிருப்பு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், பூபதி … Read more

தமிழகம் முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 76பேரை பணியிட மாற்றம் செய்துடிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் சம்பத், ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட், திருச்சி மாவட்டநில மோசடி தடுப்பு பிரிவுக்கும், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பணிபுரிந்த கணேஷ், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் பணிபுரியும் சங்கர், திருநெல்வேலி … Read more

விவசாயத்தை மையமாக வைத்து மோடி தலைமையில் ராம ராஜ்ஜியம் அமையும் – அண்ணாமலை

விவசாயத்தை மையமாக வைத்து இந்தியாவில் மோடி தலைமையிலான ராம ராஜ்ஜியம் அமையும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த மூன்று நாட்களாக சேலத்தில் நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது… விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற … Read more

Tamil News Live Update: செஸ் ஒலிம்பியாட்.. அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates செஸ் ஒலிம்பியாட் செஸ் ஒலிம்பியாட் 9ம் சுற்றில், அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனவ் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கொடியேற்ற தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  இந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு … Read more

பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கப்பல் சென்னை வருகை

சென்னை: பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை அடுத்த காட்டுப்பள்ளிக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது. தற்போது, இந்தியா – அமெரிக்கா இடையே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அமெரிக்ககடற்படையைச் சேர்ந்த சார்லஸ் டிரியூ என்ற கடற்படை சரக்குக் கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல்முறையாக நேற்று இங்கு வந்தது. இக்கப்பலை எல் அண்டு டி துறைமுகத்தில், மத்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய்குமார் … Read more

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டிய பாம்பாட்டி கைது

ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டியதாக பாம்பட்டி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி காளியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டினார். அப்போது அதை செல்போனில் வீடியோ எடுத்த நபர், சமூக வலைதளங்களில் பதிவிட்ட … Read more