Today Rasi Palan 26th July 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 26th July 2022, Monday ராசிபலன் ஜூலை 26 செவ்வாய்க்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 26th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 26ம் தேதி 2022ராசி … Read more

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி  காரணமாக மயிலாப்பூர், அண்ணா நகர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், தண்டயார்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், மதியம் 2.00 மணிக்குள் … Read more

’ஆர்டர்லி’ புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி தொடர்பாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும். தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற கூலிங் பிலிம் ஒட்டக் கூடாது’ என்று … Read more

அஜித்தை எதிர்பார்த்த கூட்டம்; வந்தவர் யாஷிகா; ஆனாலும் ரசிகர்கள் குஷி!

க. சண்முகவடிவேல் Yashika anand Tamil News: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார். இதேபோல் இரவு … Read more

மத்திய அரசுக்கு அவசர அவசரமாக பறந்த கடிதம்.! முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை.!!

கடந்த 20-7-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எடுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், … Read more

புதுச்சேரியில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி, … Read more

ஓ.பி.எஸ் நியமித்த புதிய நிர்வாகிகள்: வைத்திலிங்கம்- இணை ஒருங்கிணைப்பாளர்

OPS appoints ADMK new functionaries Vaithilingam as Joint coordinator: அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றறிருந்ததால், அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். … Read more

பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை – போக்குவரத்து துறை.!

பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் தடை செய்து போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

அரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை – சிபிசிஐடி விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் பள்ளி, விடுதி, திருத்தணி அருகே மாணவியின் கிராமம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருத்தணி அடுத்ததெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் மகள் சரளா (17), இந்தப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பள்ளி விடுதியிலேயே … Read more