அனைத்து மக்களுக்கும் காப்பீடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தல்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: ஏழை மக்களுக்கான காப்பீடு திட்டத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் ரூ.500 கோடி நிதியை புதுச்சேரிக்கு தர அவரிடம் கோரியுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினவிழா இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இந்திய சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் … Read more

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ‘சைகை மொழி’ போராட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாதாந்திர உதவித் தொகையா ரூ.3000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. காது கேளாத மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் … Read more

#BigBreaking || நாளை சிறப்பு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்… பாஜக தரப்பில் வெளியான பரபரப்பு தகவல்.!

புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (பாஜக) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி, நாளை … Read more

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள் | முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி முதல்வர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக … Read more

’வீட்டுபாடம் எழுதலன்னா இப்படியா அடிப்பீங்க’ – மாணவியை அடித்ததாக ஆசிரியை மீது புகார்

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொரட்டூரில் உள்ள எல்சடாய் பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவி 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் வகுப்பு வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியை பார்வதி என்பவர், கை மற்றும் காலில் கம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் மாணவிக்கு கை மற்றும் காலில் காயம் எற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை பார்வதி மீது … Read more

திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் இடத்தைப் பிடிப்பது யார்? ஆவின் கார்த்திகேயன் மும்முரம்

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான மோதல் வெடித்துள்ள நிலையில், வருகின்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். வசமுள்ள பொருளாளர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு சில நிர்வாகிகளே இருக்கின்றனர். அதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில மாவட்ட செயலாளர்களின் பதவியும் பறிபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர். இவர் இடத்திற்கு ஆவின் கார்த்திகேயனை நியமிக்க … Read more

சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர்… யார் இவர்.?!

மகாகவி பாரதியார்: மக்கள் மனதில் இன்றுவரை வேறூன்றி நிற்கும் புகழ்பெற்ற கவிஞர். பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர். பெண் அடிமைத்தனம், ஜாதி கொடுமைகள் போன்றவற்றிற்கு இறுதிவரை எதிர்த்து நின்றவர் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு…!! பிறப்பு : மகாகவி சுப்ரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். கல்வி : ஏழு வயதில் பள்ளியில் … Read more

6 ஆண்டுகள் வரை நிலையான வருவாய் – விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டன் ரோஜா: ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு 6 ஆண்டுகள் நிலையான வருவாய் தரும் பட்டன் ரோஜா 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பட்டன் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. ஒருமுறை சாகுபடி செய்யப்பட்ட பட்டன் ரோஜா செடிகள் தொடர்ச்சியாக 5 முதல் 6 ஆண்டுகள் வரை நிலையான லாபம் கொடுப்பதால், இப்பகுதியில் பட்டன் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு … Read more

அனுமதியின்றி மேம்பாலத்தை திறந்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் கைது! வேலூரில் பரபரப்பு

அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே,அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு. தானாக சென்று ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை அடுத்து இவர் மீது வருவாய் துறையினர் … Read more

கொரோனா தொற்று: திருச்சி விமான நிலையத்தில் உஷார்

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதில் நேற்று புதிதாக 62 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த  எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் … Read more