தமிழக செய்திகள்
நீலகிரி மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!
பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடரும் கனமழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்பழ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு தற்காலிக பாலத்தை தண்ணீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் தெப்பக்காடு-மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட … Read more
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரத்தில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 2-வது முறையாக நேற்று சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் மான்சா நகரில் நிறுவப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டம், சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் (செப்கோ) என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு … Read more
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.!
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, காலை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்புமணி இராமதாஸ் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள எல்லை போராட்ட தியாகி தளபதி.கே.வினாயகம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பாமகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார்: இன்று காலை 9 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இதனிடையே, வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட 16 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புதல் … Read more
பாஜககாரர் என்பதால் தான் சவுதாமணி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. அண்ணாமலை காட்டம்..!
பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே சவுதாமணி கைது செய்யப்படிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார், பாஜகவின் செயற்குழு உறுப்பினரான சவுதாமணி கடந்த அவரது டிவிட்டர் பக்கதில் வீடியோ ஒன்றைபகிர்ந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி … Read more
நீட் இளநிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
சென்னை: இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வரும் 17-ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், … Read more
தமிழகத்தில் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள்…? அமைச்சர் அளித்த பேட்டி.!
தஞ்சாவூர் மாநகராட்சி முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது, “தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. … Read more
மாணவியருக்கான ரூ.1000 உதவித் தொகை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: அரசுப் பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள் ஆகும் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று … Read more