பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்து.. கூலித் தொழிலாளி படுகாயம்.!

பெரும்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது, இதில் தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி அப்பதான் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக வர்கீஸ் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பெரும்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த தனியார் … Read more

தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி ஒருவர் UPSC தேர்வில் 338வது இடம் பிடித்துள்ளார். மைக்கேல்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாத தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வேளாண் பொறியியலில் தங்கப்பதக்கம் பெற்றவரான ரெனிட்டா, UPSC தேர்வில் தேசிய அளவில் 338வது இடம் பிடித்தார். விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக இருக்கும் ரெனிட்டாவிற்கு மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.   … Read more

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூரில் வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருப்பதி கோயிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு இன்று (மே 31) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” திருச்செந்தூர் கோயிலில் ரூ.200 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை … Read more

கோபியை வெளியில் தள்ளிய ராதிகா… அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்யலட்சுமி

Tamil Serial Baakiyalakshmi Rating Update : திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துக்கொண்டால் கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு பாக்யலட்சுமி சீரியல் ஒரு பெரிய உதாரணம். ஆன இதை இவ்வளவு இழுவையா சொல்லிருக்க கூடாது என்று புலம்ப வைத்துள்ள சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலானா பாக்யலட்சுமி சீரியலில் கோபி தனது மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைத்து அதற்கான முயற்சியில் இறங்க, மகா சங்கமத்திற்கு வந்த … Read more

சாலையில் குளித்து துணி துவைத்து கொந்தளித்த டெரர் பாய்ஸ்..! தாமிரபரணி குடிநீர் குழாயில் ஓட்டை

தாமிரபரணி கூட்டுகுடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாவதை தடுக்க கோரி சாலையில் தேங்கிய நீரில் இரு இளைஞர்கள் துணி துவைத்து குளித்து ஓட்டையை அடைக்க நூதனமாக வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை – சங்கரண்கோவில் இடையே அமைந்துள்ளது சேர்ந்தமரம் கிராமம், இந்த கிராமத்தின் வழியாக வாசுதேவ நல்லூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுகுடி நீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடி தண்ணீர் வீணாகி சேர்ந்தமரம் … Read more

புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு ஆளுநர் அனுமதி அளிக்கக் கூடாது: அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: “புதுச்சேரியில் புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு துணை நிலை ஆளுநர் அனுமதித் தரக்கூடாது; மீறி, தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சித்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என அம்மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக கூறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நாள்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் … Read more

NEET UG 2022: இலவச மாக் டெஸ்ட்; முந்தைய ஆண்டு வினாத் தாள் பெறுவது எப்படி?

NEET 2022 free mock test and previous year papers download here: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பெறுவது எப்படி? மாதிரி தேர்வுகளை இலவசமாக பயிற்சி செய்வது எப்படி? என்பது குறித்து இப்போது பார்ப்போம். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்தி … Read more

திருவாரூர் மாவட்டம்.! குளிக்க சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி.!

திருவாரூர் மாவட்டத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரைக்கோட்டை, தண்ணீர்பந்தல் தெருவை சேர்ந்த டேனியல் (வயது 15) மற்றும் அதே பகுதியில் நடேசன் காலனியை சேர்ந்த மகேந்திரன் (வயது 15) இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து செருமங்கலத்தில் உள்ள சக்குரியான் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது நீச்சல் தெரியாததால் டேனியல் மற்றும் மகேந்திரன் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த நண்பர்கள் கரைக்கு சென்று உதவி … Read more

குரங்கம்மை பரவல்: வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.!

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து சென்னை, கோவை உட்பட சர்வதேச விமான நிலையங்கள் வருபவர்களை கண்காணிக்க தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வரும் நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகள் அனைவரும் தங்களது பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு உடல்வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு … Read more

“தமிழக அரசு 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால்…” – அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: “தமிழக அரசு இன்னும் 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர். எழும்பூர் ருக்மணி லட்சுமபதி சாலையில் … Read more