சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (01.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 01/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 50/45 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 35/30/28 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 20/17 முள்ளங்கி 20/17 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் என்பது தவறானது.. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் மறுப்பு..!

திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்று டீன் ஜோசப்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். பாம்புக் கடிக்கான அனைத்து மருந்துகளும் இந்த  மருத்துவமனையில் கையிருப்பு உள்ளதாக கூறிய அவர், பாம்பு கடித்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் … Read more

'பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது' – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (மே 31) தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில், பகுதிகழக பீளமேடு 2 பொறுப்பாளர் மா.நாகராஜ் … Read more

அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 5

அழகிய பெரியவன் பெயரில் என்ன இருக்கிறது? நாடு நவீனமாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஒரு பெயர் இந்திய மக்களின் மனசாட்சியை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் விசையூக்கம் கொண்டதாக அறியப்படுகிறது. இந்தியாவில் வைக்கப்படும் எல்லா பெயர்களையும் போல அதுவும் ஒரு பெயர்தான் என கடந்துச் சென்றுவிட முடியாதபடிக்கு இந்திய மக்கள் ஆளுக்கொரு அர்த்தத்தை அதிலிருந்து புரிந்துகொள்கிறார்கள். அல்லது ஆளுக்கொரு அர்த்தத்தை அதற்கு வழங்குகிறார்கள். அப்பெயரை வழிபடுகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். மூளையில் ஆழமாகச் சென்று மாயங்களை நிகழ்த்திவிடும் … Read more

#BREAKING || பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை  உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு.!

தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி போராட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் … Read more

திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது – டீன் ஜோசப்ராஜ்

திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்று டீன் ஜோசப்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். பாம்புக் கடிக்கான அனைத்து மருந்துகளும் இந்த  மருத்துவமனையில் கையிருப்பு உள்ளதாக கூறிய அவர்,  பாம்பு கடித்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் … Read more

மற்றவர்களை தரமின்றி விமர்சனம் செய்ய சிவாஜி பெயரைப் பயன்படுத்த வேண்டாம்: இரா.முத்தரசனுக்கு ராம்குமார் வேண்டுகோள்

சென்னை: பிறரை தரமின்றி விமர்சிப்பதற்கு, நடிகர் சிவாஜியின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசனுக்கு, சிவாஜியின் மகன் ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்,பிரதமர் மோடியை விமர்சிக்கும்போது, தேவையின்றி தந்தை சிவாஜியின் பெயரை இழுத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன், பிரதமர் மோடி ஆகியோர், இடைவிடாத மற்றும்அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்உயர்ந்த இடத்தை … Read more

கட்டணமே இல்லாமல் தபாலில் கோவில்பட்டி கடலை மிட்டாய்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

Post office delivers Peanut candy to home without service charge: கோவில்பட்டி கடலை மிட்டாயை சேவைக் கட்டணம் இல்லாமல் தபாலில் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. … Read more

#BREAKING : இலங்கையில் இருந்து 3 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more

பட்டாக்கத்தியுடன் உலா வந்த மர்ம கும்பல்.. பொதுமக்களை தாக்கி மிரட்டி அட்டூழியம்..!

சென்னை சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் ஒன்று அப்பகுதி மக்களை பட்டாகத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 6 இரு சக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் ஹெல்மெட் அணிந்து வந்த 12பேர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படம் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர். இதற்கு தெரியாது என்று பதிலளித்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அவரை … Read more