பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரமில்லை: மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின்(யுஜிசி) செயலர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது விதிகளை மீறும் செயலாகும். பெரியார் பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2020 ஜூன் மாதம்வரையே அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. இதனால் பெரியார் பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 கல்வியாண்டுகள் பெரியார் பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி … Read more

மதுரை: திரும்ப பெறப்பட்டது தூய்மை பணியாளர்களின் 2 நாட்கள் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 2 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் ‘தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை வைரஸ்.. தமிழக சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு.!

குரங்கு அம்மை வைரஸ் பிரிட்டன், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலில் தடிப்புகள் இருப்பவர்கள், குரங்கு அம்மை இருக்கும் நாட்டுக்கு கடந்த 20 நாட்களில் … Read more

கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 8வது நாளான நேற்று ராஜஸ்தான் பவாய் கரகம்,தோண்டி கரகம் மற்றும் மலைகிராம மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சாகச கரகாட்டம்,தப்பாட்டம்  மற்றும் பழமை வாய்ந்த இசை வாத்தியங்கள் முழங்க பூம்பாறை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. Source link

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் … Read more

முதலாளி பாலியல் தொல்லை அளிக்கிறார்.. பெண் செய்த விபரீத செயல்..!

முதலாளி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் நவனீதன் என்பவருக்கு சொந்தமான துணிகடையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 11 ஆண்டுகளாகவேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவனீதனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால்கூறி விரட்டியுள்ளனர்.  இந்நிலையில், … Read more

ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை: தமிழக அரசு – அஞ்சல் துறை இடையே ஒப்பந்தம்

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் … Read more

‘ஸ்டாலினுடன் பேச விடவில்லை… இறந்து போக நினைக்கிறேன்’ முகநூலில் நெல்லை கண்ணன் ஷாக்

தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர். ஆரம்பக்காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நெல்லை கண்ணன், அவருக்கு எதிராக பல இடங்களில் பேசியுள்ளார். 1996இல் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால், அண்மைக்காலமாக ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு … Read more

பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து.. ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். மேலும் பிரதமர் மோடியின் மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். இவர் திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழி சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொத்தங்குளம் விலக்கு இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் … Read more

கலாமின் கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் – அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து

சென்னை: ‘‘அப்துல் கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் வி.செல்வமூர்த்தி, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் … Read more