Rasi Palan 2nd June 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd June 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 2nd June 2022: இன்றைய ராசி பலன், ஜூன் 2ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

விழுப்புரம் || கல்குவாரி குட்டையில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..!

கல்குவாரி குட்டையில் குளீத்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் கிருபா. இவரது பிள்ளைகள் பள்ளி விடுமுறை காரணமாக பாட்டி புஷ்பாவிற்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்குள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் பாட்டியுடன் சேர்ந்து சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி புஷ்பா (60) வினோதினி (16) ஷாலினி (14) கிருஷ்ணன் (8) உள்ளிட்டோர் பரிதாபமாக பலியானர். … Read more

தென்காசியில் ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகள் பறிமுதல்.!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாதாபுரம் பகுதியில் TN75 A 7651 என்ற பதிவு எண் கொண்ட 2 லாரிகளை பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். இவை சிவகாசியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், ரோடு வரி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்காக ஒரே எண்களை பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Source link

சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், சத்தி குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவி்ட்டுள்ளார். Source link

ஆனையேறும் பெரும் பறையர் – அண்ணாமலை அளிக்கும் புதுவிளக்கம்.!

“From a pariah to a ViswaGuruFrom Dark to லைட்” 8 ஆண்டுகள் எங்கள் முதல் ஊழியராக நரேந்திர மோடியை எண்ணுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் போட. அதற்க்கு விசிக வன்னியரசு சாதியை அசிங்கப்படுத்திவிட்டார், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதில் டிவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில், “எச்சரிக்கை பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி … Read more

தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது ‘தனிஷ்க்’ – ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து முன்னெடுப்பு

சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ எனும் தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘புதுமைப் பெண்’, தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும், அருகிலுள்ள தனிஷ்க் ஷோரூமுக்கும் … Read more

சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி! சொன்னது யார் தெரியுமா?!

உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு! சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் … Read more

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு – தனிமனித இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், டெல்லி, ஹரியாணா, உத்தர … Read more

பணம் கேட்டு மிரட்டிய காதலியின் உறவினர்கள்.. பொய் புகார் அளிப்பதாக கூறியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

பெண்ணின் காதலனைய் என்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் திக்விஜய் சிங் பர்மர். அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த பெண்ணின் உறவினர்கள் திக்விஜய் சிங்கை மிரட்டி பணம் பறிக்க முயன்று உள்ளனர். ஒருவேளை பணம் தர மறுத்தால் அந்த … Read more

ஸ்டெர்லைட் வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜர்; மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜராகினர். மறு விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான 22.5.2018-ல் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 101 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு … Read more