கமல்ஹாசனுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி

விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு … Read more

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி​யில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்​தவர் ராஜேஷ். 1972-79 கால​கட்​டங்​களில் சென்​னை​யில் ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். இதற்​கிடையே, 1974-ம் ஆண்டு கே.​பாலசந்​தரின் ‘அவள் ஒரு தொடர்​கதை’ படத்​தில் நடிக​ராக அறி​முக​மா​னார். பின்​னர் ராஜ்கண்ணு தயாரிப்​பில் கே.​பாக்​ய​ராஜ் இயக்​கிய ‘கன்னி பரு​வத்​திலே’ … Read more

ராமதாஸ் குற்றச்சாட்டு எதிரொலி: நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் அன்புமணி – பாமகவில் நடப்பது என்ன?

விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் … Read more

17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன்கூட்டி, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், அசாம், பஞ்சாப்,ஹரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட … Read more

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம்

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த அகழாய்வு குறித்து இந்திய தொல்லியல் துறை சில விளக்கங்களை கோரி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் … Read more

சிறுவாணி குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் எடுக்கப்படும் குடிநீரின் … Read more

'தாயை பாட்டிலால் அடித்தவர் அன்புமணி… வளர்த்த கடா…' எரிமலையாக வெடித்த ராமதாஸ்

Anbumani vs Ramadoss: பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அடுக்கடுக்காக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை – நடந்தது என்ன?

சென்னை: பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (மே 29) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானார். மருத்துவ மாணவியின் பாதுகாப்பில் … Read more

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை ஏற்கனவே. 2024 தேர்தலில் இது முடிவு செய்யப்பட்டது தான் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

நீலகிரியில் பெய்யும் கனமழையால் வேகமாக நிரம்பும் அணைகள்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்திக்கான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோடை காலங்களில் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க … Read more