“செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டி” – துரை வைகோ ஆவேசம்

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, “நீங்கள் முருகனைப்போல உலகத்தை சுற்றாமல், விநாயகரைப்போல, அமைச்சர் நேருவை சுற்றிவந்தால் போதும். பொருளாதாரத்துக்கு என்றாலும், ஓட்டுக்கு என்றாலும் அவரை மட்டும் சுற்றிவந்தால் போதும்” என்றார். திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி பேசும்போது, “நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் … Read more

கையில் தாமரையுடன் கோயிலில் வழிபட்ட தமிழிசை… நாளை வேட்பு மனு தாக்கல்!

பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். 

தமிழகத்தில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக் கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச்30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். … Read more

ரயில் நிலையங்களில் மானிய விலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை: ரயில்வே வாரியம் அனுமதி

சென்னை: மத்திய அரசு சார்பில், மானியவிலையில் விற்பனை செய்யப்படும் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு சார்பில், பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவை மானிய விலையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு தரப்பினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையங்களில் மானிய விலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை விற்பனை செய்ய ரயில்வே வாரியம் … Read more

சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் – பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள் என கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

திமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராக மாநில எல்லையில் மறியல் செய்த வாட்டாள் நாகராஜ் கைது

ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் திமுக தேர்தல் அறிக்கையை கண்டித்து மறியல் செய்த வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், டெல்டா விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணைக்காட்டுவதை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து கன்னட சலுவளி ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50 பேர் கர்நாடக மாநில … Read more

தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் போராட்டம் @ கிருஷ்ணகிரி

ஓசூர்: அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராததால் வரும் மக்களவை தேர்தல் உள்ளிட்ட இனிவரும் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துக்கோட்டை ஊராட்சி மல்லிகார்ஜூனதுர்கம், ஏணிபண்டை, வீரசெட்டி ஏரி, ஒசஹள்ளி, சொப்புக்குட்டை, குருபரப்பள்ளி, ஆலத்தி, குடிசல்பைல், கொல்லப்பள்ளிபைல் உள்ளிட்ட கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக குடியிருப்புகள் மற்றும் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு … Read more

“எனக்கு விஜய பிரபாகரன் ஒரு மகன் போன்றவர்” – ராதிகா சரத்குமார் @ சிவகாசி

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் போன்றவர் என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூரில் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்து, விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவை அறிமுகம் செய்துவைத்தார். அவருடன் அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் … Read more

“தமிழகத்தின் நிதி உரிமை, கல்வி உரிமையை பாஜக பறிக்கிறது” – உதயநிதி @ மதுரை

மதுரை: நமது மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமையை பாஜக அரசு பறிக்கிறது என்று மதுரையில் பிரச்சாரக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார், மதுரை ஊமச்சிகுளத்தில் இன்று திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு மக்கள் எழுச்சியை பார்க்கும்போது சு.வெங்கடேசன் 200 சதவீத வெற்றி நிச்சயம் என்று என்னால் சொல்ல முடிகிறது. இது பிரச்சாரக் கூட்டம் மாதிரி இல்லை, … Read more

“மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்” – நாம் தமிழர் வேட்பாளர் வீரப்பன் மகள்

கிருஷ்ணகிரி: “நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார். கிருஷ்ணகிரியில் இன்று (மார்ச் 24) மாலை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்தேன். அந்தக் கட்சியிலும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ஆனால் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரிய அளவில் செயல்படவில்லை. ‘கூச முனிசாமி … Read more