1967-க்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பே அளிக்கவில்லை: ராகுலுக்கு பிரதமர் மோடி பதில்

Cong ‘instigated’ labourers to breach lockdown…poll defeats didn’t dent party’s ego: PM Modi: 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி அத்துமீறிய மருத்துவர்.. சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆபாச வீடியோ காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில்  பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது டாக்டர் மோகன்குமார் என்பவர் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். … Read more

சாலையோர சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்.. விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு <!– சாலையோர சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்….. –>

திருப்பூர் அருகே சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொல்லிக்காளிபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையின் சாக்கடை கால்வாயில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூட்கேஸை மீட்டதுடன், அதன் உள்ளே கழுத்து அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 முதல் 35 … Read more

கொடநாடு விவகாரத்தில் உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “முன்பு முதலமைச்சராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார்? அதனை அவரால் பட்டியல் போட முடியுமா? நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் … Read more

ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மகிழ்ச்சி அளிக்கிறது… ஆந்திர எம்.எல்.ஏ., ரோஜா பேட்டி

Andhra MLA Roja meets CM Stalin: அவசரம் தேவையை கருதி நேரில் வந்து சந்தித்தாக முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு, ஆந்திர மாநில எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறினார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ., ரோஜா இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ரோஜா. மேலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போகிறது "இரட்டை இலை” தான் – தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அவர்களின் அந்த கடிதத்தில், “நிழலின் அருமை வெயிலில் தெரிவது போலவும், நேர்மையின் பெருமை நிம்மதியில் அறியப்படுவது போலவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அருமையும், பெருமையும் விடியா பொழுதாக, முடியா இருளாக விளங்கும் திமுக … Read more

தாய்க்கு காதலன்.. மாணவிக்கு வில்லன்.. கம்பி எண்ணும் மருத்துவன்..! போக்சோவில் தூக்கிய போலீஸ் <!– தாய்க்கு காதலன்.. மாணவிக்கு வில்லன்.. கம்பி எண்ணும் மருத்… –>

காரைக்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை காதல்வலையில் வீழ்த்திய எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் , காதலியின் மகளான பள்ளிச்சிறுமியிடமும் அத்துமீறியதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு … Read more

விழுப்புரம்: பேருந்தில் தவறவிட்ட குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ‌மணக்காணம் அருகே ‌பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 மாத குழந்தையை வைத்திருக்குமாறு கூறியுள்ளார். அப்பெண் குழந்தையை வாங்கிய சிறிது நேரத்தில் குழந்தையை கொடுத்த நபர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் … Read more

சென்னை மெட்ரோ: போரூர், பூந்தமல்லி மக்கள் பயனடையும் வகையில் டபுள் டெக்கர் லைன்

Chennai Metro : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நான்கு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் போது காரிடர் 4 மற்றும் 5-ல் ஒரே நேரத்தில், ஒன்றன் மீது ஒன்றாக, இரண்டு ரயில்கள் 5 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், காரம்பாக்கம், போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வடசென்னை அல்லது தென் சென்னைக்கு எளிதாக பயணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துவங்கியுள்ள … Read more

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும் – மத்திய அரசு.!

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக -வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்றும், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில், … Read more