புழுதிப் புயலால் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து..!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிகாகோவில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபார்மர்ஸ்வில்லி நகருக்கு அருகே இண்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது,அங்கு திடீரென பலத்த காற்று வீசியதை தொடர்ந்து புழுதிப் புயல் உருவானது. … Read more

நகரமயமாவதால் பெருகும்ஆஸ்துமா :இன்று மே 2 உலக ஆஸ்துமா தினம்| Asthma on the rise due to urbanization: Today May 2 is World Asthma Day

ஆஸ்துமாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு என்பதே 2023ம் ஆண்டு ஆஸ்துமா தினத்திற்கான உறுதிமொழி. ஆஸ்துமா என்பது மூச்சுகாற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாச குழாய்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசகுழாய்களில் சுருக்கம் மற்றும் வீக்கம் ஏற்பட்டு மிக குறைவான அளவே நுரையீரலில் காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது. இது அதிகப்படியான சளியை உருவாக்கலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசு தான். கடந்த ஐந்தாண்டுளில் ஆஸ்துமா பாதிப்பு இருமடங்காக அதிகரித்து விட்டது. உலகம் முழுவதும் … Read more

ச்சே… ஏன் இந்த வேலையை செஞ்சேன்? உலகத்துக்கே ஆபத்து! எச்சரிக்கும் AI காட்பாதர்

கூகுளிலிருந்து விலகும்‘ செயற்கை நுண்ணறிவின் தந்தை ஜெஃப்ரி ஹிண்டன்,’ நவீன தொழில்நுட்பத்தின் ‘ஆபத்துகள்’ குறித்து எச்சரிக்கை….

‘ஆபரேஷன் காவேரி’ மூலம் சூடானில் இருந்து மேலும் 186 இந்தியர்கள் மீட்பு: இதுவரை 3,000 பேர் நாடு திரும்பினர்

ஜெட்டா: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்காததால் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலேயே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் சவுதி அரேபியாவும் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு..!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பை பேக் திட்டத்தின் கீழ் நியூயார்க் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். இதற்காக 500 டாலர்கள் கொண்ட பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கைத்துப்பாக்கியை ஒப்படைத்தால் முதல் ஆயுதத்திற்கு 500 டாலர்களும், அடுத்தடுத்த ஆயுதங்களுக்கு 150 அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. Source link

ராஜ் கபூர் வீட்டுக்கு உரிமை கோரும் மனு தள்ளுபடி செய்தது பாக்., நீதிமன்றம்| Pakistan court dismisses Raj Kapoors house claim

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்-நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மறைந்த ராஜ்கபூரின் பங்களா உள்ளது. ‘கபூர் ஹவேலி’ என்ற பெயரில் கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் அமைந்துள்ள இந்த பங்களாவை, பாக்., அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக கடந்த 2016ல் அறிவித்தது. இந்த பிரம்மாண்ட மாளிகையை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட, இதன் தற்போதைய உரிமையாளர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த பங்களாவிற்கு உரிமை கோரும் மனுவை … Read more

சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து| Tourist bus overturned accident

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், நேற்று முன்தினம் நயாரிட்டில் உள்ள கடற்கரை பகுதிக்கு சுற்றுலா செல்ல 50க்கும் மேற்பட்டோர் பஸ்சில் கிளம்பினர். நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 11 பெண்கள் உட்பட 18 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 குழந்தைகள் உட்பட 33 பேரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மெக்சிகோ … Read more

அரசு பங்களாவுக்கு ரூ.18 லட்சம் பாக்கி மாஜி பிரதமருக்கு பில் அனுப்பியது அரசு| The government sent a bill to the former prime minister owing Rs 18 lakh for the government bungalow

லண்டன்-பிரிட்டனில் உள்ள அரசு மாளிகையை பயன் படுத்தியதற்காகவும், அங்கு காணாமல் போன பொருட்களுக்காகவும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி வகித்தார். கடந்த ஆண்டு செப்., 6 முதல் அக்., 25 வரை, 44 நாட்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அவருக்கு பின், அதே கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக … Read more

தமிழின பிரச்னைக்கு சுமுக தீர்வு| A smooth solution to the Tamil problem

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-”இலங்கையில், நீண்ட காலமாக உள்ள தமிழ் இன பிரச்னைக்கு, இந்தாண்டு இறுதிக்குள் சுமுக தீர்வு எட்டப்படும்,” என, அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கை தலைநகர் கொழும்புவில், தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் விதமாக, நம் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் … Read more