அமெரிக்காவின் கரோனா தடுப்பு மாத்திரை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று: மருத்துவ ஆய்வில் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் 30 பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 30 மாத்திரைகளின் விலை … Read more

ஆபாச நடிகைக்கு பணம் – அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற பெயரை ட்ரம்ப் பெற்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான பிரச்சாரத்தைத் தொடரப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இது அரசியல் ரீதியான துன்புறுத்தல் என்றும், வரலாற்றிலேயே மிக உயர்ந்த தேர்தல் தலையீடு … Read more

பிலிப்பைன்ஸ் படகு விபத்து 31 பேர் உயிரிழப்பு

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிலன் மாகாணத்தின் ஆளுநர் ஜிம் ஹட்டாமேன் கூறியதாவது. தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் பேசிலன் நகருக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 … Read more

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்லாந்து சுற்றுலா எதிர்காலம்

தாய்லாந்து நாட்டில் சுற்றுலா துறையின் எதிர்காலம் காற்று மாசுபாட்டால் இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சுகாதார சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் காற்று மாசுபாட்டால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் பாங்காங்கில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து பணிகளை கவனிக்குமாறு தாய்லாந்து அரசு … Read more

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் – இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் திட்டம்

நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்கினை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருங்காலத்தில் Space X ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலவில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும், பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்கவும் இந்த நெட்வொர்க் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நிலவின் நெட்வொர்க், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான தகவல் தொடர்பு தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் என்றும் விண்வெளித் தொடர்புத் துறையில் … Read more

ரஷ்யாவில் உளவுபார்த்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தியாளர் கைது

ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தியாளர் கைது செய்யப்பட்டதையடுத்து ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க செய்தியாளர் உளவு பார்த்து கையும் களவுமாக பிடிபட்டதாக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சேருவதற்கு முன்பு, 31 வயதான கெர்ஷ்கோவிச் மாஸ்கோவில் AFP இல் பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. … Read more

ஒரே ஆண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த அதிசய நபர்| The amazing person who made an Italian order for Rs 6 lakh in a single year

புதுடில்லி, ‘ஸ்விக்கி’ உணவு சேவை செயலி வாயிலாக, ஓராண்டில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான இட்லிகளை ஒரே நபர், ‘ஆர்டர்’ செய்து வாங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக இட்லி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை, ‘ஸ்விக்கி’ உணவு சேவை நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதன் விபரம்: இந்த ஆய்வு, 2022 மார்ச் 30 முதல், 2023 மார்ச் 25 வரை நடத்தப்பட்டது. இந்த ஓராண்டு … Read more

வெளிநாட்டவரின் குடும்பத்தார் வேலை பார்க்க கோர்ட் அனுமதி| Court permission for foreigners family to work

வாஷிங்டன், ‘அமெரிக்காவில் வேலை பார்க்க ‘எச்௧பி’ விசா வைத்துள்ளோரின் கணவன் அல்லது மனைவி வேலை பார்ப்பதற்கு அனுமதி அளித்தது செல்லும்’ என, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்௧பி விசா வழங்கப்படுகிறது. இதை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, எச்௧பி விசா வைத்துள்ளோரின் கணவர் அல்லது மனைவியும், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘சேவ் ஜாப்ஸ் யு.எஸ்.ஏ.,’ என்ற … Read more

பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ 31 பேர் பலி; 7 பேர் மாயம் | 31 killed in Philippine ship fire; 7 people are magic

மணிலா :பிலிப்பைன்சில் பயணியர் கப்பல் தீப்பற்றி எரிந்ததில், 31 பேர் பலியாகினர்; 23 பேர் படுகாயமடைந்தனர். மாயமான ஏழு பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் ஜாம்பாங்கோ நகரில் இருந்து, சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு எம்.வி., லேடி மேரி ஜாய் – 3 என்ற கப்பல் 250 பயணியருடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்தக் கப்பலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ ஜுவாலைகளின் அனல் தாங்க … Read more

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்க நிருபர் கைது | US reporter arrested for spying in Russia

மாஸ்கோ, ரஷ்யாவில் உளவு பார்த்த அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் அலுவலகம், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு, அமெரிக்காவைச் சேர்ந்த எவன் கெர்ஷ்கோவிச் என்பவர் நிருபராக பணியாற்றி வருகிறார். ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் பணியாற்றி வந்த இவர், யூரல் பிரதேசத்தில் உள்ள ஏகாதெரின்பெர்க் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போது, ரஷ்யா குறித்து ரகசிய தகவல்களை பெற்றதாகக் கூறப்படுகிறது. … Read more