ரஷ்ய படைகள் வசமுள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு முதல் முறையாக சென்ற அதிபர் புடின்.!

ரஷ்ய படைகள் வசமுள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு, முதல் முறையாக அதிபர் புடின் சென்ற விவகாரத்தில், திருடனைப் போல் சென்று வந்திருப்பதாக உக்ரைன் விமர்சித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் நேற்று சென்றார்.  நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய புதின் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ரஷ்ய … Read more

குரோஷியாவில் 2ம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி தகர்ப்பு

குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது. ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போது இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பு காவல்படை பிரிவினரால் தகர்க்கப்பட்டது.  Source link

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நகருக்கு சென்ற அதிபர் புடின்| President Putin visited a city captured by Russia in Ukraine

கிவ் : உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடரும் சூழலில், முதன் முறையாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சென்றார். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தொழிற்சாலை இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், … Read more

வங்கதேசத்தில் பஸ் விபத்து; 19 பேர் பலியான பரிதாபம்| Bus accident in Bangladesh; It is a pity that 19 people died

டாக்கா : வங்கதேசத்தில் சாலையோரப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலியாகினர்; 30 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று குல்னாவில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பஸ், மதாரிப்பூர் மாவட்டத்தின் ஷிப்சார் உபாசிலாவில் உள்ள குதுப்பூர் பகுதியில் வந்த போது சாலையோரம் இருந்த 30 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 1௬ பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் … Read more

சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்; உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய அதிபர்.!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண் பிறப்பித்த நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியான மரியுபோலுக்கு ரஷ்ய அதிபர் இன்று பயணம் மேற்கொண்டார். உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓராண்டுகள் கழிந்தும் போர் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகள் போரை தொடர செய்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதி வருகின்றனர். இந்த சூழலில் உக்ரைன் குழந்தைகளை நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கைது … Read more

கொரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை !

வாஷிங்டன், கொரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவத் துவங்கிய காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் பகிரப்பட வேண்டும் என உலக சுகாதார … Read more