ரோஹிங்கியா முஸ்லிம் பிரச்னை மியான்மர் மீது குற்றச்சாட்டு| Rohingya Muslim problem blamed on Myanmar

டாக்கா, ”ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள மியான்மர் அரசு தயாராக இல்லை,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2017ல் உள்நாட்டு போர் நடந்தது. அங்கிருந்து வெளியேறிய 11 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு மீண்டும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் மேலும் கூறியுள்ளதாவது: … Read more

அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும்: ஜோபைடன் ஹோலி பண்டிகை வாழ்த்து | Jobaidan congratulated Holi

வாஷிங்டன்: இந்திய மக்களுக்கு தனது ஹோலி பண்டிகை வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடியும் மகிழ்வர். அப்போது குங்குமம், மஞ்சள், வில்வம் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிவிடுவர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்துள்ள ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தியில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்நாளில் அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும். எனது வாழ்த்துக்களை. … Read more

ஹோலி பண்டிகை: பாகிஸ்தானில் இந்து மாணவர்கள் மீது தாக்குல்.!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடும் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 15 மாணவர்கள் தீவிர இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர். இது இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். சிந்தித் துறையில் இந்துக்களும் பிற மாணவர்களும் ஹோலியைக் கொண்டாடி, … Read more

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய சிந்தி மாணவிகள் மீது தாக்குதல்.. மதவாத அமைப்பினர் அடித்து உதைத்ததாக மாணவர்கள் புகார்!

பாகிஸ்தான் கராச்சியில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடிய இளம்பெண் உள்பட 15 மாணவர்கள் மத அடிப்படைவாத மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டனர். இதில் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கராச்சி பல்கலைக்கழகத்தின் சிந்தி பிரிவில் உள்ள மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் இறைத்து ஹோலி கொண்டாடிய போது மதவாத அமைப்பினர் சிலர் அவர்களைத் தாக்கினர். சில மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Source link

அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

வைரலாகும் வீடியோ: பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோக்களில், பாம்பை கண்டவுடன் மக்கள் ஒருபுறம் பயந்தால், மறுபுறம், அதை பார்த்து ரசிபப்தற்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதே பாம்பு, கொஞ்சம் அவர்கள் பக்கம் திரும்பினாலும், துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடி விடுவார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பாம்பைப் பார்த்தால் பதறிப் … Read more

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் இருந்த மரிஜுவானா செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிப்பு..!

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த மரிஜுவானா எனப்படும் கஞ்சா தோட்டத்தை போலீசார் தீயிட்டு அழித்தனர். வடக்கு சுமத்ராவின் ஆச்சே என்ற இடத்தில் உள்ள இத்தோட்டம் கடந்த மாதம் உள்ளூர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று 11 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த கஞ்சா செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது. உலகிலேயே மிக கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ள நாடாக இந்தோனேசியா உள்ளது. Source link

பயணிகள் கவனத்திற்கு..பிரபல ஆம்ஸ்டர்டாம் ரெட் லைட் ஏரியாவிற்கு சிக்கல்.!

உலகளவில் பிரபலமான ஆம்ஸ்டர்டாம் விபச்சார மையத்தால் குற்றங்கள் பெருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தலைநகரமாக விளங்கும் ஆம்ஸ்டர்டாம் சுற்றுலாவிற்கு பெயர் போனது. அதேபோல் இந்த நகரத்தின் மையத்தில் உள்ள சட்டப்பூர்வ விபச்சார மையமானது சர்வதேச அளவில் பிரபலமானது. இந்தநிலையில் விபச்சார மையத்தின் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால், விபச்சார மையத்தை வேறொரு பகுதிக்கு மாற்ற ஆம்ஸ்டர்டாம் நகர சபையானது முடிவு செய்துள்ளது. ரெட் லைட் ஏரியாவால் அதிகப்படியான குற்றம் மற்றும் அப்பகுதியில் அடிக்கடி நடக்கும் … Read more

28 நாட்கள் பாதாள அறையில் சிக்கியிருந்த தாய் நாயும், மூன்று குட்டிகளும் பத்திரமாக மீட்பு..!

துருக்கியில், 28 நாட்களாக பாதாள அறையில் சிக்கியிருந்த நாயும், அந்த இடைப்பட்ட நாட்களில் அது ஈன்ற மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. ஹட்டாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் பாதாள அறையில் சினை நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. நாய் உரிமையாளரின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த விலங்குகளுக்கான பிரத்யேக மீட்பு குழுவினர், பல மணி நேரம் போராடி நாயையும், அது ஈன்ற 3 குட்டிகளையும் மீட்டனர். பாதாள அறையில், ஒரு பை நிறைய நாய்களுக்கு வழங்கப்படும் … Read more

ஐநா.,வில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாக்.,: பதிலளிக்க கூட தகுதியற்றது- இந்தியா பதிலடி| “False Propaganda”: India On Pak Foreign Minister’s Kashmir Remarks At UN

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: அமைதி, பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நடந்த ஐ.நா., பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தீங்கிழைக்கும் தவறான பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது எனக்கூறியுள்ளது. ஐ.நா., கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள், அமைதி … Read more