சார்ஸ் குறித்த தகவலை உலகுக்கு அம்பலப்படுத்திய சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் மறைவு

ஹாங்காங்: சார்ஸ் பாதிப்பு குறித்து உலகறிய செய்தச் சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவை சீன தேச ஊடகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். 2003-ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சீனாவில் சார்ஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சொல்லி இருந்தார் அப்போதைய சீன சுகாதாரத் துறை அமைச்சர். அதை கேட்டு பதறிய மருத்துவர் ஜியாங் யான்யோங், தனக்கு தெரிந்தே சார்ஸ் பாதிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட … Read more

பனி படர்ந்திருந்த வணிக வளாகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விபத்து..

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், பனிப்படர்ந்து காணப்பட்ட வணிக வளாகத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. டுலுத் என்ற இடத்திலுள்ள மில்லர் ஹில் வணிக வளாகத்தின் மேற்கூரை முழுவதுமாக பனி படர்ந்திருந்த நிலையில், பனியை அகற்ற அங்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டிருந்த போது ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த தொழிலாளர்கள், உடனடியாக பணியை நிறுத்திவிட்டு வெளியேறிய உடன், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் … Read more

விளையாட்டு போட்டியை காண சீக்கியருக்கு அனுமதி மறுப்பு; அமெரிக்காவில் அநியாயம்.!

அமெரிக்காவில் கூடைப்பந்து போட்டி ஒன்றில் ‘கிர்பான்’ அணிந்ததால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சீக்கியர் ஒருவர் கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ‘கிர்பான்’ என்பது ஒரு சிறிய வாள், பட்டா அல்லது பெல்ட்டின் உறையில் வைக்கப்படும் சிறிய கத்தி ஆகும். சீக்கியர்கள் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டிய சடங்காக இது ஆக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில், தொழில்முறை வட அமெரிக்க கூடைப்பந்து லீக் NBA அணியான சேக்ரமெண்டோ கிங்ஸ் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது. ட்விட்டரில், மந்தீப் … Read more

நாளை காலை 10 மணி வரை இம்ரான் கானை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை

இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பாகிஸ்தான் போலீசாருக்கும் 2 நாட்களாக கடும் மோதல் வெடித்த நிலையில், நாளை காலை 10 மணி வரை அவரை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இம்ரான் கான், பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்கள், கைது செய்யவந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், போலீஸ் … Read more

இங்கிலாந்து மக்கள் ஆனந்த கண்ணீர்; அப்படி என்ன செய்தான் திருடன்.?

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் தனது குற்றச் செயலில் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததால், அவர் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தந்தது மட்டுமல்லாமல், மன்னிப்புக் கடிதத்தையும் திருடப்பட்ட பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் விட்டுச் சென்றது பேசுபொருளாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள கனாக்கில் உள்ள ஹியூஸ் இறுதி ஊர்வல சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் முகமூடி அணிந்த திருடன் அங்கிருந்த “சொர்க்கத்திற்கான போஸ்ட்பாக்ஸ்” என்று அழைக்கப்படும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட … Read more

அடக்குமுறையின் நவீன வடிவம்.. 10 லட்சம் திபெத் குழந்தைகள் டார்கெட்.. சீனா அடாவடி.!

சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை கடந்த 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டதிபெத்தியர்களை சீன ராணுவம் படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோ சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சொந்த மொழி, மதத்தைப் பின்பற்ற முடியாமல் அகதிகளைப் போன்று திபெத் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வேவு பார்க்கப்பட்டு, இன்றுவரை வேட்டையாடப்பட்டு வருகின்றனர். சீனாவிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் … Read more

குழாயை அழகாக திறந்து விட்டு, குட்டி குளியல் போட்ட கிளி; வைரலான வீடியோ

டொரண்டோ, கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, மனிதர்கள், குரங்குகள் உள்ளிட்ட பாலூட்டி வகைகளுடன் ஒத்து போகிற அளவுக்கு கிளிகள் அறிவாற்றல் கொண்டவை என தெரிய வந்து உள்ளது. அவை கணக்குகளை தீர்க்கும் திறன்கள், தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆற்றல், எண்ணிக்கை, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றுடன் பூஜ்யம் பற்றிய விசயங்களையும் கூட புரிந்து கொள்ளும் திறன் படைத்தவை என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவை பல்வேறு பாஷைகளை கற்கும் திறனுடன், மனிதர்களுடன் … Read more

கூகுளில் என்னை பற்றிய தேடுற…. அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர்…!

சியோல், வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார் கிம் ஜாங் உன். அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார். அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார். கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் … Read more

2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா..

2 குறுகிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா மீண்டும் பரிசோதித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியை தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், அந்த 2 நாடுகளின் பரம எதிரியாக கூறப்படும் வடகொரியா நேற்று 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. 2 ஏவுகணைகள் பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பான 5 புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் இன்று பகிர்ந்துள்ளது. அவசியம் ஏற்பட்டால் எதிரிகளை தாக்கி அழிக்கும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சியே … Read more

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் சோகம்; 190 பேர் பலி, 584 பேர் காயம்

மலாவி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு … Read more