சீனாவை அடக்க தைவான் பிரச்சனையை கையில் எடுக்கும் மேற்கத்திய நாடுகள்.!

தைவானுக் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக இங்கிலாந்து செய்துள்ள செலவு மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடம் கடந்தும் இன்னும் உக்ரைன் போர் முடிவடையவில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் வழங்கும் நிதி, ஆயுத உதவிகளால் போர் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யாவிற்கு வெகு தொலைவில், சம்பந்தமே இல்லாத இடத்தில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்ய எல்லையில் தனது படைகளை நிறுத்த உக்ரைனை தூண்டியதின் விளைவாக இந்த போரை ரஷ்யா தொடங்கியது. அமெரிக்காவின் … Read more

நிதி நெருக்கடியால் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் – ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகம்

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், தேர்தலை நடத்துவதற்கு அரசு நிதி ஒதுக்காததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதால், வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியன்று தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக … Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது..!

லாஸ் ஏஞ்சல்ஸ், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் … Read more

அடுத்த கட்ட போருக்கு தயாராகும் சீனா; இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை.!

எல்லையில் துப்பாக்கியை பயன்படுத்த கூடாது என்பதால், இந்திய விரர்களை தாக்க மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களை சீனா வாங்கியுள்ளது. இதன் மூலம் கல்வான் மோதல் போன்று மேலதிக தாக்குதல் சம்பவங்கள் நடக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளதாக்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வரை உயிரிழந்தனர். ஆனால் நான்கு பேர் தான் தங்கள் தரப்பில் இருந்து உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. ஆனால் … Read more

தாய்லாந்தில், தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்.. விதவிதமான காய்கறிகள், பழங்கள் படைத்து யானைகளுக்கு விருந்து

தாய்லாந்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் யானைகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பண்டைய காலம் தொட்டு, தாய்லாந்து கலாச்சாரத்தில் யானைகள் முக்கிய பங்காற்றிவருவதால், ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி அங்கு யானைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. சோன்புரி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோங் நூச் தாவரவியல் பூங்காவில், 26 அடி நீள மேஜையில், 3 டன் பழங்களும், காய்கறிகளும் படைக்கப்பட்டு, 60 யானைகளுக்கு பரிமாறப்பட்டன. Source link

4 நாள் பயிற்சி, போருக்கு போ… புதினிடம் அழுது புலம்பும் வீரர்களின் தாய்மார்கள், மனைவிகள்

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி சி.என்.என். பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில், 4 நாட்களே பயிற்சி பெற்ற தங்களது அன்புக்கு உரியவர்களை தாக்குதல் குழுவில் சேரும்படி, மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாயப்படுத்தி உள்ளனர் என பெண்கள் கூறுகின்றனர். அவர்களில் … Read more

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது…!

லாஸ் ஏஞ்சல்ஸ், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டில் தாயை பிரிந்து தவிப்பது மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து கும்கியாக மாற்றி வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பாகன்கள், கால்நடை டாக்டர் கொண்ட மருத்துவ குழு கண்காணிப்பில் குட்டி யானைகள் வளர்க்கப்படுகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் … Read more

நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் இந்திய சினிமாவின் வெற்றி – நடிகர் ராம் சரண்

“ரஷ்யாவுடன் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் உக்ரைனின் கீவ் அரண்மனையில் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம்” என்று நடிகர் ராம் சரண் கூறியுள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற நிலையில் அதுகுறித்து நடிகர் ராம் சரண் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாங்கள் படமாக்கியதிலேயே “நாட்டு நாட்டு” பாடல்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. என்றும், அந்த பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் … Read more

போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடினை சீன அதிபர் சந்திக்க திட்டம்| Chinese President Plans to Meet Russian President Putin Amid War

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்ய பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஒராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது … Read more