உக்ரைனின் பாக்முட்டில் கடும் மோதல்-இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்றுவரும் பாக்முட்டில் உள்ள உக்ரைன் வீரர்கள் இன்று கடும் தாக்குதலை எதிர்கொண்டனர். டொனெட்ஸ்க் பகுதியில் 24 மணி நேரத்தில் 220-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில், பாக்முட் நகரில் நடைபெற்றுவரும் மோதலில் கடந்த 6-ம் தேதியில் இருந்து ஒருவாரத்தில் மட்டும் 1100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் … Read more

நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு – இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிதுறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து … Read more

தில்லி – தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இண்டிகோவின் 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து தோஹாவுக்குப் பறந்து கொண்டிருந்த போது, மருத்துவ அவசரநிலை காரணமாக, பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இண்டிகோவின் 6E-1736 விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இருப்பினும், கராச்சியில் தரையிறங்கிய பின்னர், … Read more

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தம்!

மெக்சிகோ எல்லை வழியாக வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மெக்சிகோ எல்லை நகரமான Ciudad Juarez வழியாக முள்வேலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற அவர்களை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தஞ்சம் கோரி வந்த புலம்பெயர்ந்த பெண்கள் தங்களை அனுமதிக்கக்கோரி அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். சில புலம்பெயர்ந்தவர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் மீது வீச முயன்றதால் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி அவர்களை … Read more

அமெரிக்கா-தென்கொரியா கூட்டு பயிற்சி இன்று தொடங்கும் நிலையில் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்த வடகொரியா..!

அமெரிக்கா-தென்கொரியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கும் நிலையில், வடகொரியா ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, வடகொரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா-தென் கொரியா படையினர் இன்று முதல் 11 நாட்களுக்கு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்கின்றனர். சுதந்திரக் கேடயம் 23 என அழைக்கப்படும் இப்பயிற்சி 2017-ம் … Read more

பெருவில் யாகூ சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு

தென் அமெரிக்க நாடான பெருவில் யாகூ சூறாவளியைத்தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஏராளானமான விவசாய நிலங்கள் நீரில் முழ்கி நாசமாகியுள்ளன. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில்,அதிபர் டீனா பொலுவார்டே நேரில்சென்று பார்வையிட்டார். அப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  Source link

ஆஸி.,க்கு கிடைக்கிறது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் | Aussie gets nuclear powered submarine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும், சீனாவின் அத்துமீறல்களை முறியடிக்கவும், அணுசக்தியால் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் இடையே, ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தம் 2021ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்த நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வகையில், அமெரிக்கா தயாரிக்கும் அணுசக்தி … Read more

துரித உணவுகளைத் தின்று உடல் எடை அதிகரித்துள்ள குரங்கின் எடையைக் குறைக்க அதிகாரிகள் திட்டம்

தாய்லாந்தில் பல்வேறு வகையான துரித உணவுகளைத் தின்று கொழுப்பினால் பெரும் தொப்பை வைத்துள்ள குரங்கின் எடையைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தலைநகர் பாங்காக் பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ள நிலையில் அங்கிள் ஃபேட்டி மற்றும் காட்ஸில்லா என்று பெயரிடப்பட்ட இரு குரங்குகள் மிகவும் குண்டாக இருந்தன. சாதாரண குரங்கின் எடை 8 முதல் 10 கிலோ எடையில் இருக்கும் நிலையில் காட்ஸில்லாவின் எடை 27 கிலோவாக உள்ளது. இதன் தொப்பையோ தரையில் இழுத்தபடி செல்வதால் பெரும் சிரமத்திற்கு … Read more

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’

95th Academy Award 2023: நாட்டு நாடு RRR சிறந்த அசல் பாடலுக்கான 2023 அகாடமி விருதுகளை வென்றது நாட்டு நாடு பாடல். இதுமிகப்பெரிய சாதனையாகும். 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததற்குக் காரணம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ‘Naatu Naatu’ from RRR … Read more

உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்!

உக்ரைனின் வுஹ்லேடார் நகரின் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் சுமார் ஆயிரத்து 100 பேர் பலியாகினர். இந்நிலையில் வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசியது. அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு போன்ற உலோகங்களால் ஆன இந்த வகை குண்டுகள் மனித உடலில் பட்டதும் சதையை எரிக்கும் தன்மை கொண்டது. தெர்மைட் குண்டுகளை பொதுமக்கள் … Read more