அமெரிக்காவில் புயல் மற்றும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு.. ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வளிமண்டல புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கெர்ன்வில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். Source link

இந்திய நிதி உதவியில் இலங்கை பாட புத்தகம்| Sri Lanka Textbook on Indian Financial Assistance

கொழும்பு, :இலங்கையில் 40 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சடிக்க, இந்தியாவின் நிதியுதவியை அந்நாடு பயன்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு அடிப்படை தேவைக்கே அந்நாட்டு மக்கள் கடும் சிரமப்பட்டனர். மருந்து, உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா உதவியாக வழங்கியது. இதுதவிர, 100 கோடி ரூபாய் கடனாக வழங்கியது. அந்த நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் செலவழித்து, 40 லட்சம் பள்ளி … Read more

ஈரான் – சவுதி அரேபியா மீண்டும் நட்புறவு| Iran-Saudi Arabia friendship again

பீஜீங்:ஏழு ஆண்டுகளுக்கு முன் துாதரக உறவை முறித்துக் கொண்ட ஈரான் – சவுதி அரேபியா நாடுகள், சீனாவின் தலையீட்டால், மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தச் சம்பவம், பல்வேறு நாடுகளில் வாழும், ஷியா பிரிவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா பிரிவினர் அதிகம் வாழும், மேற்காசிய நாடான … Read more

இந்தோனேசியாவில் மீண்டும் வெடிக்கத் தொடங்கியது மெராபி எரிமலை..!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. யோககர்த்தா பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,963 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, சனிக்கிழமை பிற்பகலில் வெடித்ததில், அதிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ் நோக்கி அடர் சாம்பல் புகை வெளியேறியது. இதனால், மெராபி எரிமலையை சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை கடந்த … Read more

வெடித்து சிதறும் நிலையில் எரிமலை : 3 கி.மீ. தூரத்திற்கு கரும்புகை பரவும் என எச்சரிக்கை| Erupting Volcano : 3 km. Beware of the spread of far-flung cane

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்தா : இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து சிதறும் நிலையில் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் தீக்குழம்பு 1.5 கி.மீ. தூரம் பரவும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, இன்று நள்ளிரவு, அல்லது அதிகாலையில் வெடித்துச் சிதற உள்ளதாக அப்பகுதி கிராமவாசிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதிலிருந்து … Read more

‘பெண்கள் மார்பகங்களை மறைக்க தேவையில்லை’ – ஜெர்மனி அறிவிப்பு.!

ஜெர்மனியில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாணத்தை பொருத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாக உள்ளது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் ஜெர்மனியின் தலைநகரம், பாலின வேறுபாடின்றி, பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி நுழைய அனுமதித்துள்ளது. மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பெர்லினின் பொதுக் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண், பாகுபாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெண் சமத்துவமற்ற சிகிச்சைக்காக செனட் அலுவலகத்தை … Read more

திவாலாகி மூடப்பட்ட அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி.. விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ள எலான் மஸ்க்..!

அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்ட நிலையில், வங்கியை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் மற்றும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்புத் தொகைகளைப் பெற்று நிதியுதவி, கடனுதவிகளை அளித்து வந்த சிலிக்கான் வேலி வங்கி, வட்டி விகிதம் உயரத் தொடங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது டெப்பாசிட் தொகையை திரும்பப் பெற்றதால், திவாலானது. வங்கியின் தலைவர் கிரெக் பெக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், தான் ஒரு புதிய … Read more

சீனாவில் ‘விசித்திர’ மழை: புழுக்களிடம் இருந்து தப்பிக்க குடை பிடித்த மக்கள்?

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் வழக்கத்துக்கு மாறாக மழையுடன் புழுக்களும் சேர்த்து அடித்து வந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக சொல்லி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. பீஜிங்கில் சமீபத்தில் பெய்த மழையில் மழையுடன் புழுக்களும் சேர்ந்து தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் கையில் குடைகளைப் பிடித்துக் கொண்டு சாலையில் நடப்பதாக தகவல் வெளியானது. சாலையின் ஓரங்களில் நிற்கப்பட்டுள்ள கார்கள் மற்றும் வாகனங்களின் மேலே மழை நீருடன் திரளான புழுக்களும் மிதக்கின்றன. ஆனால், … Read more

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்..!

மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வீரர் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரேசிங் கிளப் அணியின் தடுப்பாட்ட வீரர் முஸ்தபா சைல்லா மைதானத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. Source link