பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய சிந்தி மாணவிகள் மீது தாக்குதல்.. மதவாத அமைப்பினர் அடித்து உதைத்ததாக மாணவர்கள் புகார்!

பாகிஸ்தான் கராச்சியில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடிய இளம்பெண் உள்பட 15 மாணவர்கள் மத அடிப்படைவாத மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டனர். இதில் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கராச்சி பல்கலைக்கழகத்தின் சிந்தி பிரிவில் உள்ள மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் இறைத்து ஹோலி கொண்டாடிய போது மதவாத அமைப்பினர் சிலர் அவர்களைத் தாக்கினர். சில மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Source link

அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

வைரலாகும் வீடியோ: பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோக்களில், பாம்பை கண்டவுடன் மக்கள் ஒருபுறம் பயந்தால், மறுபுறம், அதை பார்த்து ரசிபப்தற்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதே பாம்பு, கொஞ்சம் அவர்கள் பக்கம் திரும்பினாலும், துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடி விடுவார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பாம்பைப் பார்த்தால் பதறிப் … Read more

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் இருந்த மரிஜுவானா செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிப்பு..!

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த மரிஜுவானா எனப்படும் கஞ்சா தோட்டத்தை போலீசார் தீயிட்டு அழித்தனர். வடக்கு சுமத்ராவின் ஆச்சே என்ற இடத்தில் உள்ள இத்தோட்டம் கடந்த மாதம் உள்ளூர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று 11 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த கஞ்சா செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது. உலகிலேயே மிக கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ள நாடாக இந்தோனேசியா உள்ளது. Source link

பயணிகள் கவனத்திற்கு..பிரபல ஆம்ஸ்டர்டாம் ரெட் லைட் ஏரியாவிற்கு சிக்கல்.!

உலகளவில் பிரபலமான ஆம்ஸ்டர்டாம் விபச்சார மையத்தால் குற்றங்கள் பெருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தலைநகரமாக விளங்கும் ஆம்ஸ்டர்டாம் சுற்றுலாவிற்கு பெயர் போனது. அதேபோல் இந்த நகரத்தின் மையத்தில் உள்ள சட்டப்பூர்வ விபச்சார மையமானது சர்வதேச அளவில் பிரபலமானது. இந்தநிலையில் விபச்சார மையத்தின் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால், விபச்சார மையத்தை வேறொரு பகுதிக்கு மாற்ற ஆம்ஸ்டர்டாம் நகர சபையானது முடிவு செய்துள்ளது. ரெட் லைட் ஏரியாவால் அதிகப்படியான குற்றம் மற்றும் அப்பகுதியில் அடிக்கடி நடக்கும் … Read more

28 நாட்கள் பாதாள அறையில் சிக்கியிருந்த தாய் நாயும், மூன்று குட்டிகளும் பத்திரமாக மீட்பு..!

துருக்கியில், 28 நாட்களாக பாதாள அறையில் சிக்கியிருந்த நாயும், அந்த இடைப்பட்ட நாட்களில் அது ஈன்ற மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. ஹட்டாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் பாதாள அறையில் சினை நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. நாய் உரிமையாளரின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த விலங்குகளுக்கான பிரத்யேக மீட்பு குழுவினர், பல மணி நேரம் போராடி நாயையும், அது ஈன்ற 3 குட்டிகளையும் மீட்டனர். பாதாள அறையில், ஒரு பை நிறைய நாய்களுக்கு வழங்கப்படும் … Read more

ஐநா.,வில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாக்.,: பதிலளிக்க கூட தகுதியற்றது- இந்தியா பதிலடி| “False Propaganda”: India On Pak Foreign Minister’s Kashmir Remarks At UN

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: அமைதி, பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நடந்த ஐ.நா., பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தீங்கிழைக்கும் தவறான பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது எனக்கூறியுள்ளது. ஐ.நா., கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள், அமைதி … Read more

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் இழப்பு 100 பில்லியன் டாலர் என மதிப்பு

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் பேசிய ஐநா வளர்ச்சித் திட்ட அதிகாரி லூயிஸா வின்டென், துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தொடர்பாக மதிப்பீடு நடந்து கொண்டிப்பதாகத் தெரிவித்தார். வரும் 16ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கும் நிதி … Read more

பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம்.. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. கருத்து..!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத்தடை, பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் செல்லத் தடை,  அரசு அலுவலகங்களிலிலிருந்து பணி நீக்கம் என பெண்களை வீட்டிற்குள் முடக்கும் நோக்கத்துடன் தாலிபான்கள் சட்டம் இயற்றிவருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. கணவர் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே தாலிபான்கள் திருப்பிஅனுப்பிவைப்பதால், பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். … Read more

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் யார் ? ஜோ பைடன் தீவிரம்| Who is the US Ambassador to India? Jobaidan intensity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி நியமனம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இந்நிலையில் இரிக் கார்சிட்டி தூதராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரிக் கார்சிட்டி முன்னாள் … Read more

தென்கொரியாவில், ஆயிரம் நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரன்..!

தென்கொரியாவில் நாய் பண்ணை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரனிடம், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வளர்ப்பு நாய் மாயமானதாக போலீசாரிடம் புகாரளித்தார். நாயைத் தேடி போலீசார் அலைந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரித்தபோது, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்துவந்து உணவளிக்காமல் … Read more