கைது நடவடிக்கையில் இருந்து தப்ப வீட்டு சுவரேறி குதித்த இம்ரான் கான் | Imran Khan escaped from arrest by jumping over the wall of his house

இஸ்லாமாபாத் :”போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் வீட்டின் சுவரேறி குதித்தார்,” என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியைத் துவங்கிய இம்ரான் கான், 2018ல் அந்நாட்டு பிரதமரானார்.கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இவர் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீபின் அரசை … Read more

ஈரானில் 5000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புகார்| 5000 girl children were allegedly poisoned in Iran

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய், ”ஈரானில், கடந்த நவம்பர் முதல் 5000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் பலர் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவியரின் உடலில் விஷம் இருந்தது தெரிந்தது. ஈரானில் உள்ள 30 மாகாணங்களில், 21 … Read more

செயற்கை கோளை சுமந்துச் சென்ற ராக்கெட் விண்ணிலேயே அழிப்பு…!

செயற்கை கோளை சுமந்துச் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ராக்கெட்டை ஜப்பான் விண்ணிலேயே அழித்துள்ளது. வணிக ரீதியாக செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்த ஜப்பான் பயன்படுத்தி வரும் H3 ராக்கெட் மூலமாக பேரிடர் மேலாண்மை நில கண்காணிப்பு செயற்கைக்கோளான ALOS-3 தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இதில், ராக்கெட்டின் இரண்டாம் நிலை இயந்திரத்தில் எரிபொருள் எரியாததால் அதனை விண்ணிலேயே அழித்து விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோளில், வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்டறியும் … Read more

மெட்டா நிறுவனத்தின் அதிரடி ஆட்குறைப்பு அடுத்த வாரத்தில் தொடரும்! அதிர்ச்சியில் ஊழியர்கள்

வரும் வாரத்தில் மெட்டா நிறுவனம் மேலும் பல தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளது என்ற தகவல்கள், மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தனது சமீபத்திய செயல்திறன் மதிப்பாய்வின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு “துணை மதிப்பீடுகளை” வழங்கியது, இது வரவிருக்கும் மாதங்களில் அதிக பணிநீக்கங்கள் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.   பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா, வரும் வாரத்தில் மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 12,000த்துக்கும் அதிகமான ஊழியர்களை மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனம் பணிநீக்கம் … Read more

மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணி தீவிரம்..!

மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா எல்லையை ஒட்டி அமைந்துள்ள டமாலிபஸ் மாநிலத்தில், பணத்துக்காக கடத்தப்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால் அங்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை மீறி, அமெரிக்காவை சேர்ந்த 3 ஆண்களும், ஒரு பெண்ணும் காரில் மருந்து வாங்க அங்கு சென்றுள்ளனர். கார் மீது துப்பாக்கியால் சுட்ட கும்பல், அவர்களை வேறொரு காருக்கு மாற்றி கடத்திச் சென்றது. கடத்தல் கும்பல் தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு, FBI, … Read more

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலில் இன்றைய இந்தியா: ஐ.நா.வில் இந்திய தூதர் பேச்சு

ஐ.நா. சபை, சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் ஐ.நா.வில் பேசும்போது, மகளிர் மற்றும் சிறுமிகள் பலனடைவதற்காக புதிய தொழில் நுட்பங்களை குவித்து புதிய இந்தியாவானது இன்று இயங்கி வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இனி பார்க்கப்பட கூடாது. அவர்கள் நாட்டை கட்டமைப்பவர்களாகவும் பார்க்கப்பட வேண்டும் என சந்தேகமேயின்றி தெரிவித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக கொண்டு இது செயல்படுகிறது. … Read more

இத்தாலியில் போட்டி போட்டு அசுரவேகத்தில் சென்ற இரு ஃபெராரி கார்கள்.. விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்து நாசம்..!

இத்தாலியில் போட்டி போட்டு அசுரவேகத்தில் சென்ற இரு ஃபெராரி கார்கள் விபத்தில் சிக்கி தீக்கிரையாயின. அன்கோனா என்ற இடத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்தவரும், பின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் தாங்கள் வைத்திருந்த விலை உயர்ந்த ஃபெராரி கார்களில் போட்டி போட்டு ஓட்டிச் சென்றனர். சாலை திருப்பத்தில் வளைவதற்கு பதில் காற்றில் பறந்து வந்த இரு கார்களும் அருகில் இருந்த வீட்டு சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்த சில நொடிகளில் கார் ஓட்டுநர்கள் இருவரும் சிறு சிறு காயங்களுடன் காரில் … Read more

சீன வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெறாது: குவின் வாங் கடுமையாக விமர்சனம்

பீஜிங், உக்ரைனில் நடந்து வரும் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷிய ஆதரவு நாடுகளையும் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் சமீபத்தில், அமெரிக்க பயணம் … Read more

கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அண்டை வீட்டுச் சுவர் ஏறி தப்பினார் இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க பக்கத்து வீட்டு சுவர் குதித்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத் காவல்துறையினர் இம்ரான்கானைக் கைது செய்ய லாகூர் சென்றதாகவும்,அப்போது அவர் தனது வீட்டுச்சுவரைத் தாண்டி அண்டை வீட்டுக்குள் புகுந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார். தனக்கு அன்பளிப்பாக வந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று பணம் சம்பாதித்ததாக இம்ரான்கான் மீது … Read more

போலீஸ் கைது செய்ய வருவதை அறிந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய இம்ரான் கான்- பரபரப்பு தகவல்

இஸ்லமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். இதனிடையே பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் ஆட்சிதான் காரணம் என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்து, … Read more