72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் திட்டம்..!

பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் 72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் இலக்குடன் அது செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் போயிங் வரலாற்றில் ஐந்தாவது பெரிய வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். போயிங் விமானங்களை சவூதி அரேபியா வாங்குவதன் மூலம் அமெரிக்காவில் இது சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம், 2030ஆம் ஆண்டுக்குள் 330 … Read more

இம்ரான் கானை கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து பெரும் வன்முறையில் இறங்கினர் அவருடைய ஆதரவாளர்கள்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்ய முயற்சி செய்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்ததால் கலவரச் சூழல் காணப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இம்ரான்கான் வீட்டின முன்பு நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கான் அதிகாரிகளுக்கு … Read more

ஐரோப்பாவுக்கு வெளியே முதல் பேட்டரி ஆலையை அமைக்க ஃபோக்ஸ்வாகன் திட்டம்

ஐரோப்பாவிற்கு வெளியே முதல் பேட்டரி ஆலையை அமைப்பதற்காக கனிமங்கள் நிறைந்த கனடாவை ஃபோக்ஸ்வாகன் வாகன உற்பத்தி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இது கனடாவின் மின்சார வாகனத் துறையில் மிகப்பெரிய ஒற்றை முதலீடாக மாற உள்ளது.உலகெங்கிலும் உள்ள நாடுகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாகவே கனடா அரசு பல பில்லியன் டாலர்களை பசுமை தொழில்நுட்பத் திட்டங்களில் முதலீடு செய்கிறது. லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் … Read more

காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா! உங்கள் நகரத்திற்கு என்ன இடம்?

நியூடெல்லி: உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் உள்ளன என்ற தகவல் கவலைகளை அதிகரிக்கிறது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில் பட்டியலின் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சுவிஸ் நிறுவனமான IQAir இன் சமீபத்திய மாசுபாடு தரவரிசை வெளியாகியுள்ளது. உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள (Air Pollution) முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பதைக் காட்டும் இந்த ஆய்வில்,131 … Read more

கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியை புரட்டிப்போட்ட ஃபிரெட்டி சூறாவளியால் பலியானவர்கள் எண்ணிக்கை 190 ஆக உயர்வு

கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியை தாக்கிய ஃப்ரெடி புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்‍கு ஆப்ரிக்‍க நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஃப்ரெடி புயல், ஒரே மாதத்தில் 2வது முறையாக மொஸாம்பிக் அருகே கரையைக் கடந்தது. இதனால், அங்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அண்டை நாடான மாலாவியையும் இந்த புயல் கடுமையாக தாக்கியது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 190 பேர் வரை … Read more

சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது தைவான்..!

சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், தைவான் தனது முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்திவரும் அமெரிக்க ஆளில்லா விமானம் போன்று, தைவானில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ட்ரோன் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானில் … Read more

3 ஆண்டுக்கு பின் எல்லையை திறந்தது சீனா: வெளிநாட்டு பயணியருக்கு இன்று முதல் விசா| China To Allow Foreign Tourists After 3 Years Of Border Restrictions

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: மூன்று ஆண்டுகளாக சுற்றுலா பயணியருக்கு மூடப்பட்டு இருந்த சீன எல்லைகள் இன்று (மார்ச் 15) முதல் திறக்கப்படுகின்றன. கல்வி, வேலை, சுற்றுலா உட்பட அனைத்து வகையான, ‘விசா’க்களும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல வினியோகிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பரவல் துவங்கியதும், 2020 மார்ச் முதல் சீனா தன் எல்லைகளை மூடியது. சுற்றுலா பயணியர் சீனாவுக்குள் நுழைய முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அனைத்து வகையான, ‘விசா’ வினியோகமும் … Read more

அதிபர் குறித்து இணையத்தில் தகவல் தேடியவருக்கு மரண தண்டனை| Death penalty for searching for information about the President on the Internet

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய … Read more

அதிகரித்து வரும் மூத்த குடி மக்கள் பிரச்சினையை சமாளிக்க ஓய்வு பெறும் வயதை உயர்த்த சீனா முடிவு

அதிகரித்து வரும் மூத்த குடி மக்கள் பிரச்சினையை சமாளிக்க ஓய்வு பெறும் வயதை உயர்த்த சீனா முடிவு செய்துள்ளது. “ஓய்வு பெறும் வயதை நெருங்கும் நபர்கள் பல மாதங்களுக்கு ஓய்வு பெறுவதை தாமதப்படுத்த வேண்டும்” என்று அதிபர் ஜின்பிங் கூறினார். மக்கள் தங்கள் சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப எப்போது ஓய்வு பெறுவது என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிப்பதே சீர்திருத்தமாகும் என்று கூறியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, தற்போது, சீனாவின் ஓய்வூதிய வயது ஆண்களுக்கு … Read more

3 ஆண்டுக்கு பின் எல்லையை திறந்தது சீனா வெளிநாட்டு பயணியருக்கு இன்று முதல் விசா| China opens border after 3 years, visa for foreign travelers from today

ஹாங்காங், மூன்று ஆண்டுகளாக சுற்றுலா பயணியருக்கு மூடப்பட்டு இருந்த சீன எல்லைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கல்வி, வேலை, சுற்றுலா உட்பட அனைத்து வகையான, ‘விசா’க்களும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல வினியோகிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பரவல் துவங்கியதும், 2020 மார்ச் முதல் சீனா தன் எல்லைகளை மூடியது. சுற்றுலா பயணியர் சீனாவுக்குள் நுழைய முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அனைத்து வகையான, ‘விசா’ வினியோகமும் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் படிப்படியாக குறைய துவங்கியதும் மற்ற … Read more