நோய்கள் எத்தனை வகை: இன்று உலக அரிதான நோய் தினம்| How many types of diseases: Today is World Rare Disease Day

உலகில் 7000 விதமான அரிதான நோய்கள் உள்ளன. உலகில் 35 கோடி பேர், இந்தியாவில் 7 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய நோயால் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வலியுறுத்தி பிப். 28ல் அரிதான நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரிதான நோய் என்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப வரையறை செய்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) 2500 பேரில் ஒன்று அல்லது அதற்கும் குறைவான பாதிப்புடன் கூடிய … Read more

பூடான் செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தி! இனி Duty Free தங்கம் வாங்கலாம்!

  சுற்றுலாவை மேம்படுத்த பூட்டான் தயாராகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க பூட்டான் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். உண்மையில், பூட்டானுக்குச் செல்வவர்கள், இந்தியர்கள், அங்கு ட்யூட்டி ப்ரீ தங்கத்தை வாங்கலாம். நிலையான அபிவிருத்தி கட்டணங்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள் திம்பு மற்றும் பூட்டானின் ஃபுட்ஷோலிங் நகரங்களிலிருந்து ட்யூட்டி ப்ரீ தங்கத்தை வாங்கி பலனடைய முடியும். பூட்டானுக்குச் சுற்றுலா செல்லும் மக்களில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். எனவே, பூட்டான் அரசாங்கத்தின் … Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவித்தது. கலிபோர்னியாவில் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60 வயதான டாம் க்ருசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் ஹாலிவுட் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டாப் கன் மேவரிக் திரைப்படம் மூலம் புதிய ரத்தத்தை டாம் க்ருஸ் பாய்ச்சியிருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். Source link

கால்பந்து போட்டியின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பல்லாயிரக்கணக்கான பொம்மைகளை மைதானத்திற்குள் வீசிய ரசிகர்கள்..!

துருக்கியில், உள்ளூர் கால்பந்து போட்டியின்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான பொம்மைகளை பார்வையாளர்கள் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். பிப்ரவரி ஆறாம் தேதி, அதிகாலை 4 மணி 17 நிமிடத்தில் நிலநடுக்கம் தாக்கியதை நினைவுகூரும்விதமாக, அதே நேரத்தில் Teddy Bear பொம்மைகளை வீசும் நிகழ்வு நடைபெற்றது. Source link

மத்திய அமெரிக்க மாநிலங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் போன்ற மத்திய அமெரிக்க மாநிலங்களை நோக்கி சக்திவாய்ந்த புயல்கள் நகர்ந்ததால் பல பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேன்சஸ் மாநிலத்தில் மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சாய்ந்து பல பகுதிகள் இருளில் மூழ்கின. Source link

மிகவும் நெருக்கமான நபரால் புடின் கொலை செய்யப்படுவார் : ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அவருக்கு மிகவும் நம்பிக்கையான நபரால் ஒரு நாள் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்கமானவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் ஜெலன்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார். புடின், தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்துள்ளதால் ஜெலன்ஸ்கி கூறுவது சாத்தியமல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Source link

கால்பந்தாட்ட மைதானத்தில் ‘டெடிபியர்’ மழை… இது துருக்கி நெகிழ்ச்சி!

இஸ்தான்புல்: துருக்கியின் பெசிக்டாஸ் நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது பூகம்ப பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டெடிபியர்களை பார்வையாளர்கள் மைதானத்தில் தூக்கி எறிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா – துருக்கி எல்லையில் மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியா – துருக்கி நாடுகளுக்கு உலக நாடுகள் நிவாரண … Read more

அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் – ஷெபாஸ் ஷெரீப்

இத்தாலிக்கு, அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 140 பேருடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு இத்தாலி கடற்கரையை நெருங்கியபோது பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. 81 பேர் நீச்சலடித்து கரை சேர்ந்த நிலையில், குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். … Read more

அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: நேபாள அரசியலில் மீண்டும் குழப்பம்| Ministers suddenly resign: Chaos again in Nepali politics

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாள அரசியலில் இன்று திடீர் திருப்பமாக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்தார். இதனால் கூட்டணியில் முறிவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன. நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், 87 ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் – … Read more