அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர பனிப்புயல் – 1.20 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. இந்த புயலால் டஜன் … Read more

இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும்: அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர்

வாஷிங்டன்: இந்தியாவின் வளர்ச்சியும் அதன் சர்வதேச முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன் தெரிவித்துள்ளார். சிலிகான் பள்ளத்தாக்கிற்கு கடந்த வாரம் வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன், அங்குள்ள சமுதாய தலைவர்களிடமும், இந்திய ஊடகங்களிடமும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. சர்வதேச அரங்கில் அதன் முக்கியத்துவம் மேலும் வளரும். அதேபோல், … Read more

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர், நர்சு, நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.25 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 97 லட்சத்து 17 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 4 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

இத்தாலி கடற்பகுதியில் படகு மூழ்கி 59 அகதிகள் பலி

ரோம், வறுமை மற்றும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. இதில் 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். இதுவரை 59 … Read more

இலங்கைத் தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம்!

இலங்கையில், உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தக்கோரி தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை நிதிப் பற்றாக்குறை காரணமாக ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் தடையை மீறி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சியினரை கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். Source link

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம்: 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் 4-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அடுத்த 3 மணி நேரத்துக்குள் ராணுவ தரப்பில் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி பாகிஸ்தானின் … Read more

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – அமெரிக்கா

 உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால், சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யாவுக்கு உதவி செய்ய வேண்டுமா என்பதை சீனாதான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சீனத்தலைவர்கள் யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீன அரசாங்கம் பரிசீலித்து வருவதாக … Read more

மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து சாட்ஜிபிடி மூலம் ரூ.9 லட்சம் வசூல் செய்த தலைமை அதிகாரி

ஒட்டாவா: சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்தது.இணைய உலகில் சாட்ஜிபிடிபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய பதிலை உடனடியாக சாட்ஜிபிடி வழங்குகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி, கனடாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கிரேக் ஐசன்பெர்க் கனடாவில் வடி வமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு சேவை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்குரிய பணத்தை வழங்காமல் தொடர்பைத் … Read more

பாகிஸ்தான் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்

பாகிஸ்தான் மருத்துவமனைகளில்  இன்சூலின் உள்ளிட்ட முக்கியமான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தான், பல்வேறு மருந்துகளின் இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில்  இன்சூலின், டிஸ்பிரின், கால்போல், போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,  நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.  மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது பயன்படும் அனஸ்தியா மருந்து, 2 வாரங்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாகவும் … Read more