துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடக்கம்

துருக்கியில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக புதிய வீடுகளை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 15 லட்சம் மக்கள் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். துருக்கியில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓராண்டுக்குள் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அந்நாட்டு அதிபர் தையிப் … Read more

‘50 ஆயிரம் பேர் பலியானது பத்தலையா.?’ – துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.!

துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கதால் மாபெரும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி ஒரே நாளில் மட்டும் மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். அதிகாலையில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கிக் கொண்டிருந்தபோது மக்கள் இடிபாடுகளில் சிக்கியதால் உயிரிழப்பு அதிகரித்தது. நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்த மக்களும் தங்கள் உறவுகளை இழந்து, வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கின்றனர். குறிப்பாக கஹ்ராமன்மராஸ், அதியமான், மாலதியா, தியார்பகிர் உள்ளிட்ட நகரங்கள் … Read more

கை-கால்கள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் சிறை மாற்றம் செய்யப்பட்ட 2000 கைதிகள்..!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட சிறைக்கு ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் கைதிகள், கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் எல் சால்வடாரில் ஏராளமான ரௌடிக் குழுக்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 62 பேர் கொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது. அந்நாட்டு அதிபர் நயீப் புகெலேவின் அதிரடி … Read more

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனா கடன்: அமெரிக்கா கவலை| Chinese Loans To Pak “Deeply Concerning”, In “Serious Talks” With India: US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீன வழங்கும் கடன், தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலும், அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீனாவிடம் கடன் வாங்க பாகிஸ்தான் முடிவு செய்தது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை சீனாவிடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. இச்சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலர் கடன் வழங்குவதாக சீனா … Read more

மேற்கத்திய நாடுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனுக்கு வெற்றி: ஜெலன்ஸ்கி

கீவ்: தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பேசும்போது, “மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு நிதி சார்ந்தும், ஆயுதங்கள் சார்ந்தும் அவை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரஷ்யாவின் படைகளை நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோம். எங்களது வெற்றி தவிர்க்க முடியாததாக ஆகும். நாம் சிறப்பாக பணியாற்றினால். வெற்றி நமக்கு நிச்சயம்” என்று பேசினார். இதனிடையே, உக்ரைனில் இருந்து ரஷ்ய … Read more

‘சீனாவிடம் கடன் வாங்கினால் அவ்வுளவுதான்..’; அமெரிக்கா எச்சரிக்கை.!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வருகிற மார்ச் 1ம் தேதி 3ம் தேதி வரை மூன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில் இந்தியாவின் உடனடி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் கடன்கள் அந்த நாடுகளை சீனா மறைமுகமாக ஆக்கிரமிப்பதை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா ஆழ்ந்த கவலையில் உள்ளது என்று வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் … Read more

மோமோ ட்வின்ஸ்: அமெரிக்காவில் நடந்த அதிசயம்… அடுத்தடுத்து பிறந்த இரட்டை குழந்தைகள்!

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தை சேர்ந்த தம்பதி பிராங்கி ஆல்பா மற்றும் பிரிட்னி. இவர்களுக்கு ஓராண்டிற்கு முன்பு Identical Twins எனப்படும் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டை குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு லெவி (Levi), லூகா (Luka) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சூழலில் பிரிட்னி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இரட்டை குழந்தைகள் மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் மீண்டும் இரட்டை … Read more

மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக் வாகன அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல்..!

மத்திய உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக்கின் வாகன அணிவகுப்பு மீது மேற்குவங்கத்தில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூச் பிஹார் தொகுதி எம்பியான அவர், அங்குள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கும்பல் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்திய கும்பலை கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கட்டுப்படுத்தினர். எல்லை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில், பழங்குடியின இனத்தவர் ஒருவர் பலியான சம்பவத்தில் நிசித் எந்த நடவடிக்கையும் … Read more

எதிர்கால பிரிட்டன் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தி மொழி அவசியம் : பிரிட்டன் எம்.பி., | Future British economy will grow if Hindi is learned: British Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: இந்தி மொழியை கற்றுகொள்வதன் மூலம் பிரிட்டனின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மேம்படும் என இங்கிலாந்து எம்.பி., கரேத் தாமஸ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: இங்கிலாந்து அரசு தெற்காசிய மொழிகளை கற்று தருவதில் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக இந்தி , உருது, குஜராத்தி மொழிகளை கற்றுதருவதன் மூலம் மற்றும் கற்றுக்கொள்வதன் மூலம் இருநாடுகளிடையேயான தொடர்பை மேம்படுத்த முடியும். மேற்கண்ட மொழிகளை கற்பதன் மூலம் … Read more

பெருவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு

தென்அமெரிக்கா நாடான பெருவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வட-மத்திய ஹுரல் பள்ளத்தாக்கில் உள்ள மக்காடன் மலையில், சாண்டாய் கலாச்சாரத்தைச் சேர்ந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த தொல்லியல் துறையினர், கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புகள் மற்றும் பாத்திரங்கள் கி.பி ஆயிரம் முதல் ஆயிரத்து 440ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று தெரிவித்துள்ளனர்.  Source link