பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு..!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு  ‘தெரீக்-இ-தாலிபன்’ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  Source link

2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்க வேண்டும் – உக்ரைன் அதிபர் பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை!

அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாகப் பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியிருந்தது. இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுதிய கடிதத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தீர்மானத்திற்கு எதிரான தனது முடிவை தெரிவித்துடன், ரஷ்ய விளையாட்டு வீரர்களை போட்டியிட … Read more

மெக்சிகோவில் பயங்கரம்: கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. ‘எல் வெனாடிடோ’ என்ற பெயரில் இயங்கும் இந்த கேளிக்கை விடுதி உள்ளூர் மக்களிடம் மிகவும் பிரபலமானதாகும். தினந்தோறும் இரவு இந்த கேளிக்கை விடுதியில் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அந்த வகையில் சம்பவத்தன்று இரவிலும் கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது மர்ம … Read more

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

பீஜிங், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் … Read more

கடும் பனிப்புயல் எதிரொலி: ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, 1,019 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான FlightAware தெரிவித்துள்ளது. பனிப்புயலால், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. விமான சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பால், விமான நிலையங்களில் ((ஆயிரக்கணக்கான ))பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Source link

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

பீஜிங், சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, இந்தியாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் – 413 பக்க அறிக்கையில் அதானி குழுமம் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், “அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடி யிலும்ஈடுபட்டுள்ளனர்” என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன. இதற்கு, அதானி குழுமம் 413 பக்கங்களைக் கொண்ட மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் … Read more

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்

ரோம், புனித பூமியில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து வருவதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், “இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு.. 150க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான உடல்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. Source link

போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் – குரோஷியா அதிபர்

சஹ்ரெப், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 341-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி … Read more