பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு.. 150க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான உடல்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.