ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நாடு திரும்பிய தூதரக அதிகாரிகள்..!

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் தூதரகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில், தூதரக பாதுகாப்பு பிரிவின் தலைவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனிப்பட்ட பிரச்சனைகளால் தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட தூதரக அதிகாரிகள், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிற்கு சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பதற்றம்: அமைதிப் பேச்சுக்கு போப் வலியுறுத்தல்

ரோம்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போப் பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் … Read more

பாகிஸ்தானில் ஏறியில் படகு கவிழ்ந்து விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து  விபத்துக்குள்ளான சிறார்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணை ஏரியில் சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது நிலைதடுமாறிய படகு திடீரென கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி 17 சிறார்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.   Source link

ஈரான் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல்

ஈரான் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்பஹான் அருகே உள்ள அந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உயிர் சேதமோ அல்லது மிகப்பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்களில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மேலும் 2 ட்ரோன்கள் பாதுகாப்பு பொறிகளில் சிக்கி வெடித்ததாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. தாக்குதலை நடத்தியது யார் என தெரியாத … Read more

மெக்சிகோவில் இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு.. 8 பேர் பலி!

மெக்சிகோவில் இரவு விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். ஜெரெஸ் நகரில் உள்ள “எல் வெனாடிடோ” இரவு கேளிக்கை விடுதிக்கு 2 வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், விடுதி ஊழியர்கள், இசைக் கலைஞர்கள், வாடிக்கையாளர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர். இதில், சம்பவ இடத்திலே ஆறு பேர் நிலைகுலைந்து உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் பலியாகினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் மேலும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

பாகிஸ்தானில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இதன் தலைநகர் குவெட்டாவில் இருந்து பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய நகரமான கராச்சிக்கு நேற்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. பாலத்தின் ஒரு வளைவில் திரும்பியபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ், பாலத்தின் … Read more

பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு

பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என்று  அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதேபோல் உலக பெரும்கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார். இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள  413 பக்க அறிக்கையில்,  ஹின்டன் பர்க்கின் அறிக்கை நன்கு ஆய்வு செய்யப்பட்டது அல்ல என்றும், அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் ஆய்வறிக்கை … Read more

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, 72 வயது முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பெவர்லி கிரெஸ்ட் என்கிற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி … Read more