Covid Alert: பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்துமா?

பெய்ஜிங்: கோவிட் அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில் பயணங்களைக் குறைக்குமாறு பயணிகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) வெடித்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீனவின் போக்குவரத்து துணை அமைச்சர் சூ செங்குவாங், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இன்று சீனாவின் போக்குவரத்து அமைச்சகம் (வெள்ளிக்கிழமை ஜனவரி 6) வெளியிட்ட கோவிட் அறிவுறுத்தல்களில், … Read more

இரு நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்த புதின்: உக்ரைன் நிராகரிப்பு

உக்ரைன்: இரண்டு நாட்கள் ரஷ்யா விடுத்த போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. ரஷ்யாவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள அறிவிப்பில், “புனித நாளை முன்னிட்டு ஜனவரி 6, ஐனவரி 7 ஆகிய தேதிகளில் போர் நிறுத்த அறிவிப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன். கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் சேவைகளில் பங்கு கொள்ள அனுமதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், … Read more

மகள்களுடன் சேர தனது பாலினத்தை மாற்றிய தந்தை – கண்டனம் தெரிவிக்கும் LGBTIQ அமைப்பினர்

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர் ரெனே சலினாஸ் ராமோஸ் (74) என்பவர் மனைவியுடன் பிரிந்து வாழ்கிறார். அவரின் மகள்கள் தற்போது தாயாருடன் வசித்து வருகின்றனர். இதனால், மகள்களை தன்னுடன் அனுப்ப கோரி மனைவியுடன் சட்டப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார், ராமோஸ்.  ஈக்வடார் நாட்டில் குழந்தைகள் விவகாரத்தில் தந்தையர்களை விட தாயாருக்குதான் சட்டம் சாதகமாக இருக்கும் என ராமோஸ் கூறுகிறார். எனவே, மகள்களை தனது பாதுகாப்பில் அனுப்புவதற்காக தனது பாலினத்தையே சட்டரீதியாக மாற்றியுள்ளார். அதன்மூலம், அவரின் அரசு ஆவணங்களில் அவரின் புதிய … Read more

உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிறுவனம் தகவல்..!

உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்கள் பற்றிய விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக் தெரிவித்துள்ளது. இந்த பயனாளர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விபரங்கள் கடந்த 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள ஹட்சன் ராக் நிறுவனம், ட்விட்டர் நிறுவனத்தை எலன் மாஸ்க் வாங்குவதற்கு முன்னதாகவே இவை நடந்திருக்கலாம் என்றும் … Read more

Pope Benedict XVI: பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் போப் 16ம் பெனடிக்ட்

வாடிகன்: உலக கத்தோலிக்கர்களின் தலைவராக திகழ்ந்த, முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்த போப் 16ம் பெனடிக்டிடின் உடல்m 5 நாட்களாக  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று, ஜனவரி 5 ஆம் தேதி 16 மறைந்த போப்பின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட்டுக்கு அஞ்சலி செலுத்த உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் … Read more

கோவிட் மரணங்கள் குறித்து சீனாவிடமிருந்து போதுமான தகவல்கள் வரவில்லை – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் கொரோனா அதிகரித்த நிலையில், பெய்ஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவிட் மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் சீன வெளியுறவு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் உடனுக்குடன் அனைத்து தகவல்களும் உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதுவரை 5 ஆயிரத்து 259 பேர் கொரோனா நான்காவது அலைக்கு பலியானதாக சீன அரசு அறிவித்துள்ளது. ஆனால் தினசரி ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 11 நாட்களில் 13,569 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்ற பறவை..!

அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் என்ற பறவை 13ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 13ந்தேதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் இருந்து பறக்கத் தொடங்கிய இந்த பறவை கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது. இதற்கு முன்பு இதே இனத்தைச் … Read more

கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய 2 எம்.பி.,க்களுக்கு 6 மாதம் சிறை| 2 MPs jailed for 6 months for assaulting pregnant MP

தாகர் : செனகல் நாட்டு பார்லிமென்டில் கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய இரண்டு எம்.பி.,க்களுக்கு, தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு ஆப்ரிக்க நாடான செனகல் பார்லி.,யில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,யான ஆமி என்டியாயோ கினிபியை, எதிர்க்கட்சி எம்.பி., மசாதா சாம்ப், கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு தாக்க முயன்ற கினிபியின் வயிற்றில் மசாதாவும், … Read more