கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!

பாகிஸ்தானில் உணவுநெருக்கடி: பாகிஸ்தானில் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர் கொள்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கைபர் பன்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை பெற மக்கள் முண்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.  சந்தையில் ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளைப் பெற ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் … Read more

மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – தேர்தல் கமிஷன் அதிரடி!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத … Read more

ஒரு கிலோ கோதுமை ரூ.150… அலைமோதும் கூட்டம் – பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உதவ மறுக்கும் உலக நிதி அமைப்பு: பாகிஸ்தானில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியம் மறுத்துவிட்டது. நிதி உதவி கிடைத்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் எனும் நிலையில் உள்ள பாகிஸ்தான், … Read more

பசுமை வனமாக மாறிய மெக்காவின் பாலைவனம்.. மலைப்பகுதிகளில் புற்கள் படர்ந்திருக்கும் அரிய காட்சி..!

வறண்ட பாலைவன நாடாக அறியப்படும் சவூதி அரேபியாவின் மெக்கா மலைப்பகுதிகள், தற்போது பசுமை வனமாக மாறியிருக்கும் அரிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மெக்கா மலைப்பகுதிகள் பொதுவாக வறண்டு பாலைவனமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கனமழையால், பாலைவனமாக இருந்த பகுதிகளில், தற்போது புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன. ஒட்டகங்கள், புற்கள் மீது நடந்துச்சென்ற காட்சிகளை, சவூதியின் வானிலை ஆர்வலர் அப்துல்லா அல்சுலாமி செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

பிரேசிலில் முன்னாள் அதிபர் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல்!

பிரேசிலில் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளாத முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தினர். கலவரம் தொடர்பான காணொளிக் காட்சிகள் வெளியான நிலையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கலவரம் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு செயல்களை நிராகரிப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கூட்டாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலையில் … Read more

ஹைட்ராலிக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பிய ஏர் விஸ்தாரா UK 781 விமானம்..!

டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சென்ற ஏர் விஸ்தாரா UK 781 விமானத்தின் ஹைட்ராலிக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. ஹைட்ராலிக் கோளாறு காரணமாக முழு அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. Source link

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இங்கிலாந்து அரசு தடை.!

இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 14ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் மக்குவதற்கு 200 ஆண்டுகள் வரையில் ஆகுவதாகவும், அதுவரையில் சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரசா கபி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஓர் ஆண்டில் மட்டுமே சுமார் 5 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுவதாகவும், அதில், 10 சதவீதம் மட்டுமே மறுபயன்பாட்டிற்கு வருவதாகவும் தெரசா கபி தெரிவித்தார். Source link

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 90 சதவீத பேர் கொரோனா நோயால் பாதிப்பு – சுகாதாரத்துறை அதிகாரி பேட்டி!

சீனாவின் 3-வது அதிக மக்கள்தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில் 90 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்க போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஹெனான் மாகாணத்தில் மொத்த மக்கள்தொகையான 99.4 மில்லியனில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 வாரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். Source link

ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் – வீடியோ வெளியிட்ட 6 பத்திரிகையாளர்கள் கைது!

தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், கடந்த 2011 ஆம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த மாதம் தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. அதிபர் … Read more

உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க இங்கிலாந்து பரிசீலனை!

ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க பிரிட்டன் பரிசீலித்து வருகிறது. ரஸ்ய தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதன் ஒருகட்டமாக, 4 புள்ளி 2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சேலஞ்சர் 2 டேங்குகள் வழங்குவது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரஸ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட  லெப்பர்டு 2 வகை டேங்குகளை வழங்க வேண்டும் … Read more