ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு US FDA அனுமதி!

அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அங்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி இனி அமெரிக்க சந்தையில் கிடைக்கும். அத்தகைய அனுமதியை வழங்கிய இரண்டாவது நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இந்த வகை இறைச்சி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும். இந்த வகை இறைச்சி சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளது  கலிபோர்னியாவைச் சேர்ந்த அப்சைட் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் … Read more

ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் கிடைத்ததால் அதிர்ச்சி!

லண்டன், ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாதவர்கள் யாரும் இல்லை. அத்தியாவசியப் பொருட்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்வதற்கான வசதி மற்றும் குறைந்த விலை ஆகியவை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மக்களை ஈர்க்கும் காரணிகளாகும். ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில மறைக்கப்பட்ட ஆபத்துகள் உள்ளன. பலர் ஆன்லைனில் பணம் செலுத்தி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜீன்ஸ் ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ‘டெபாப்’ என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் … Read more

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடக்கம்.. பிரேசிலில் 3000-ற்கும் மேற்பட்ட டிராபிக்களை உருவாக்கிய நபர்..

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகக்கோப்பை டிராபிக்களை உருவாக்கியுள்ளார். கால்பந்து ரசிகரான ஜர்பாஸ் மெனெகினி என்பவர் தான் உருவாக்கிய கோப்பைகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரசிகர்களுக்கு விற்பனை செய்துவகிறார். 17 நாடுகளுக்கு இதனை ஏற்றுமதியும் செய்து வருகிறார். கத்தார் உலக்கோப்பையில் பிரேசில் அணி வெற்றிபெற்று தங்கக்கோப்பையை வென்றுவர வேண்டும் என விரும்புவதாக ஜர்பாஸ் தெரிவித்தார். Source link

ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்… இருளில் மூழ்கிய உக்ரைன்!

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். உக்ரைனே கூட அதை ஒரு வெற்றியாகக் கருதி கொண்டாடத் தொடங்கியது. ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது. ரஷ்யா உக்ரைனில் 2 அடிகள் பின்வாங்கி, நடத்திய தாக்குதலில், உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த வாரம் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் கேர்சன் நகரில் … Read more

இந்தியாவை ஐ.நா., நிரந்தர உறுப்பினராக்குங்க: சொல்லுது பிரான்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொது சபையில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களை அதிகரிப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஐ.நா.,விற்கான பிரான்சின் நிரந்தர துணை பிரதிநிதி நாதலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: பிரான்சின் நிலை தெளிவாக உள்ளது. அனைவருக்கும் தெரியும். இன்றைய உலகில், ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும். இதன் … Read more

Video : பறக்க இருந்த விமானம்… குறுக்கே வந்த வாகனம் – கோர விபத்து!

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில், தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அந்த வாகனத்தில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாட்டம் விமான நிறுவனம்,”அந்த விமானத்தில் மொத்தம் 102 பயணிகள் இருந்தனர். விபத்தால் பயணிகள் உள்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. https://zeenews.india.com/tamil/topics/Peru விமானம், தீயணைப்பு வாகனத்துடன் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் முழு வேகத்தில் ஓடுபாதையில் வந்துகொண்டிருந்ததால், … Read more

ஈரானில் இஸ்லாமிய புரட்சியாளர் கொமேனி இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

தெஹ்ரான்: ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா அலி கொமேனி இல்லத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. 1979 தொடங்கி ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெடித்தது. அங்கு இஸ்லாமிய அரசு அமைய முக்கியக் காரணமாக இருந்தவர் ருஹல்லா அலி கொமேனி. இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஈரான் முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா … Read more

பாகிஸ்தானில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் ஷெரீப்-பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கைர்பூர் அருகே நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். Source link

முதன்முறையாக மகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை வெளியுலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வட கொரியா ஹ்வாஸாங் 17 என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அதற்கு முன்னதாக ஏவுகணை தளத்தில் நடந்த சோதனையின்போது அதிபர் கிம் உடன் மகளும் இருந்துள்ளார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்காவின் ஸ்டிம்சன் சென்டரின் வட கொரிய தலைமை … Read more

எலன் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து ராஜினாமா கடிதங்கள் அளித்த ஊழியர்கள்.. ட்விட்டர் நிர்வாகத்தில் பெரும் குழப்பம்!

ஊழியர்கள் பணி நீக்கம், தாமாகவே ராஜினாமா செய்யும் ஊழியர்கள் என்று எலன் மஸ்க் கைப்பற்றிய ட்விட்டரின் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல் காணப்படுகிறது. பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை என்றால் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன்மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து நிறைய ஊழியர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர். ட்விட்டர் தலைமை அலுவலகத்திலும் பெரும் குழப்பமான சூழ்நிலை … Read more