அமெரிக்காவில் குளிர்கால சூறாவளி : மைனஸ் 48 டிகிரி! | Winter storm in America: minus 48 degrees!

வாஷிங்டன், :மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்ற வார்த்தையை கேட்கும்போதே முதுகுத்தண்டை உறைய வைக்கும். இந்த வெப்பநிலை அமெரிக்காவில் நேற்று முன்தினம் பதிவானது. இங்கு, குளிர்கால சூறாவளி ஏற்பட்டு, நாடு முழுதும் பெரும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர், அதாவது, 20 கோடி பேருக்கு கடும் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; 15 லட்சம் வீடுகள், அலுவலகங்களில் மின்சார வசதி இல்லை. பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸ் என்பது, உறைபனி துவங்கும் … Read more

ஆப்கானில் உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிப்பு

காபூல், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் … Read more

நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் : பஃபலோ நகரில் வீடுகளும் வாகனங்களும் பனி சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அமெரிக்காவின் நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ நகரில் வீடுகளும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பனியால் சூழப்பட்டன. பனிப்புயலால், மக்கள் வீடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, பஃபலோ மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கனடா – அமெரிக்க எல்லைப்பகுதியான பஃபலோ பகுதியில் உள்ள 3 பாலங்களும் மூடப்பட்டுள்ளன. Source link

முதியோர் இல்லத்தில் தீ: 22 பேர் பலி| Fire at nursing home: 22 killed

மாஸ்கோ,ரஷ்யாவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் சைபீரியா நகரில் உள்ள கெமரோவோ என்ற இடத்தில், முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. இந்த இல்லம் அரசிடம் பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. மரத்தாலான இரண்டு மாடிகள் கொண்ட இந்த இல்லத்தில், நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே தங்கியிருந்த முதியோர்களில் 22 பேர் தப்பிக்க வழியின்றி … Read more

சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் – பகீர் தகவல்கள்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. கடுமையான ஊரடங்கு … Read more

சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் – பகீர் தகவல்கள்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. கடுமையான ஊரடங்கு … Read more

பயனாளர்களின் தகவல்களை கசிய விட்டதாக வழக்கு – ரூ.6,000 கோடி அபராதம் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புதல்

வாஷிங்டன், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை … Read more

பிரெஞ்சு சீரியல் கில்லர் விரைவாக நாடு கடத்தப்பட்டது மகிழ்ச்சி; முன்னாள் டிஐஜி கருத்து.!

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான, நெட்ஃபிக்ஸ் தொடரான “தி சர்ப்பன்” இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில், 2003 ஆம் ஆண்டு முதல் இமயமலைக் குடியரசில் சிறையில் உள்ள சோப்ராஜ் (78) உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்பளித்தது. “அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு பொருந்தாது. … Read more

ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. ஓஹியோ நெடுஞ்சாலையில் சாண்டஸ்கி நகருக்கு அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெவ்வேறு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும், பனிப்பொழிவால் சாலைகளில் தெரிவுநிலை குறைந்திருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   Source link

ஜப்பானின் கடலோர பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நீகாட்டா மாகாணத்தில் 6,300 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

ஜப்பானின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், நீகாட்டா மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிப்பொழிவால் சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிச.17ம் தேதி முதல் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link