அணு ஆயுதப்போர் உருவாகும் சாத்தியம்; ரஷ்யா எச்சரிக்கை.!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு … Read more

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தானின் பஞ்கூர் எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், ‘தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான்’ தீவிரவாத அமைப்பு நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு … Read more

ஈராக் – ஓமன் மோதும் கல்ஃப் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண அரங்கிற்குள் சுவர் ஏறி குதித்த ரசிகர்கள்..!

ஈராக்கில், Gulf கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ள பஸ்ரா சர்வதேச அரங்கிற்குள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சுவரேறி குதித்து நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஈராக்கில் Gulf கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. ஈராக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் உற்சாக மிகுதியிலிருந்த ரசிகர்கள், சுவரேறி குதித்து அரங்கிற்குள் செல்லமுயன்றனர். Source link

சுவரில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும் பெயிண்ட் – லண்டனில் அறிமுகம்

சுவர்களில் சிறுநீர் கழித்தால் , கழிப்பவர் மீதே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் ஒன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் லண்டனில் பரபரப்பாக காணப்படும் சோஹோ பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கு வசிக்கும் முவ்வாயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து , நீரைத் தெளித்தால் அதனை வந்த திசையிலேயே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான பெயிண்ட் ஒன்றை முதற்கட்டமாக சோஹோவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் … Read more

'வருந்தத்தக்க நிலையில் உலகம்' – ஐநா பொதுச்செயலாளர் கவலை!

உலகம் பல முனைகளிலும் தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. அதில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நமது உலகம் பல முனைகளில் புயலால் பீடிக்கப்பட்டது போல் தொடர் பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. முதலில், … Read more

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் அணு ஆயுதப்போர் ஏற்படும் – ரஷ்யா முன்னாள் அதிபர் எச்சரிக்கை

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால் அணு ஆயுதப்போர் ஏற்படும் என ரஷ்யா முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவும் அமெரிக்காவும், மிகப் பெரிய அணுசக்தி வல்லரசுகள் என்றும், உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்த டிமிட்ரி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புடின் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். தன்னையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க ரஷ்யா அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்றும் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்தார். Source link

அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்தியர் பதவியேற்பு

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும் போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார். தற்போது 58 வயதாகும் அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை … Read more

இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்கிறது: ரஷ்யா

மாஸ்கோ: இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை மையப்படுத்தி ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ராணுவ கூட்டமைப்பான நேட்டோ சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்திய … Read more

அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்| Hyderabad-born Aruna Miller Sworn-in as Maryland’s First Indian American Lieutenant Governor

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்று கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக தெரிகிறது. அருணா 7 வயதாக இருக்கும் போது, தந்தையின் பணிநிமித்தம் காரணமாக … Read more

மொபைல் செயலியைப் பயன்படுத்தி முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம் பெயர்ந்தவர்கள்

மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் முதல்முறையாக அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டதையடுத்து, வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்தி மெக்சிகோவின் வடக்கு எல்லையில் இருந்து, புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்த நிலையில், மொபைல் ஆப் மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாகக் கூறினர். Source link