சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்| Dinamalar

பீஜிங்: சீனாவின் மேற்கு ஷிண்ஜியாங் மாகாணத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். சீனாவில் தொடர்ந்து கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. ‘ஜீரோ கோவிட் கொள்கை’ கடைபிடிக்கும் அரசு, அங்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஷின்ஜியாங் மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 40 லட்சம் பேர் வசிக்கும் உரும்கி நகரில் வசிக்கும் மக்கள் கடந்த … Read more

வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…

மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் சமீபத்தில், வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மிருதுவாக தோல் உடன் இந்த வாலில், துளிர் முடிகள் இருந்தன. 5.7 செ.மீட்டர் நீளத்திற்கு இருந்த அந்த வால், 3 மீ.மீட்டரில் இருந்து 5 மீ.மீட்டர் வரையும், வாலின் கடைசிபகுதியை கூர்முனையாகவும் இருந்துள்ளது.  அந்த குழந்தை நிறைமாதத்தில் பிறந்துள்ளது என்றும் கர்ப்பகாலத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கு இது இரண்டு குழந்தை என்றும் முன்னதாக பிறந்த மகன் ஒருவன் … Read more

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா … Read more

பிரிட்டனில் குச்சிப்புடி நடனமாடிய பிரதமர் சுனக் மகள்| Dinamalar

லண்டன்: பிரிட்டனில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷா சுனக்கின்(9) குச்சிப்பிடி நடனம் அனைவரையும் கவர்ந்தது. பிரிட்டனின் 57 வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்(42) சில மாதங்களுக்கு முன் பதவியேற்று கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது. அங்கு பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள … Read more

ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி – தாய்லாந்து உறவு – 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் துளிர்த்தது

ரியாத்: ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் இளைஞர் நலத்துறை தலைவராக இளவரசர் பைசல் பின் பாத் இருந்தார். அவர், அப்போதைய சவுதி மன்னர் பாத்தின் மூத்த மகன் ஆவார். அவரது அரண்மனையில் தாய்லாந்தை சேர்ந்த கிரியாங்ராய் டெங்காமாங் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நூற்றுக்கணக்கான வீரர்களின் பாதுகாப்பில் இருக்கும் அரண்மனை என்பதால் இளவரசர் பைசல் தனது … Read more

பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

Brazil School Shooting : பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் அருகருகே உள்ள இரண்டு பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று (நவ. 25) துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கையில், செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை வைத்திருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  தொடர்ந்து, அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராணுவ உடையில், முகத்தை மறைத்து இருந்துள்ளார். மேலும், அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 ஆசிரியர்கள், 1 மாணவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

சீனாவில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கரோனா – காரணம் என்ன?

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் தினசரி … Read more

ஆஸி. பெண் கொலையில் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை … Read more

பிரபல ஓவியரை கொலை செய்த 49 பேருக்கு துாக்கு தண்டனை| Dinamalar

அல்ஜியர்ஸ், அல்ஜீரியாவில் ஓவியரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த 49 பேருக்கு தூக்கு தண்டனையும், 38 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் பிரபல ஓவியரான பென் இஸ்மாயில் சமூக சேவைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி என்ற இடத்தில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது. அதை அறிந்து அங்கு சென்ற பென் இஸ்மாயில் அதில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் … Read more

நேபாளம் தேர்தல் நிலவரம் : மீண்டும் ஷேர் பகதூர் துபா ஆட்சி

காத்மாண்டு : நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர … Read more