Indonesia Earthquake : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 46 பேர் பலி

இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, 46 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தலைநகர் ஜகார்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும், சேதமா உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. … Read more

2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா

நியூயார்க்: 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்டெமிஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிலவுக்கு ஆர்டெமிஸ் ஏவுகணையை நாசா விண்ணில் செலுத்தியது. இது குறித்து அமெரிக்க … Read more

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 பதிவான இந்த நிலநடுக்கத்தால், சில அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 300 க்கும் மேற்பட்டோரில், சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். Source link

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, காயம் 300

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இன்று (திங்கள்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 20 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Moderately strong #Earthquake in Jakarta, Indonesia just occurred few … Read more

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 20 பேர் பலி; 300 பேர் படுகாயம்!

இந்தோனேஷிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய நாட்டில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பான் நாட்டிற்கு அடுத்த படியாக இந்தோனேஷிய நாட்டில் தான் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்தோனேஷிய நாட்டின் ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 … Read more

சீனாவில் மீண்டும் கோவிட் பரவல்.. இரண்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி அந்த நாடு யோசிக்கத் தொடங்கி உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயது மூதாட்டியும் 88 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி காலமானதான் கோவிட் பாதிப்பு மீணடும் அதிகரித்து விடுமோ என்ற பயம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கோவிட்  பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த 27 ஆயிரம் பேரில் 2365 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  கோவிட் … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு: ஈரானின் பிரபல நடிகைகள் இருவர் கைது

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள் இருவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோர் ஈரானின் பிரபல நடிகைகள். இருவரும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றவர்கள். இவ்விருவரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்காக இருவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஹென்காமெஹ் … Read more

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி மத சொற்பொழிவுகள்: கத்தாரில் ஜாகீர் நாயக்

தோஹா: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ஃபைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மத போதகர் ஷேக் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்” … Read more

பிபா உலகக் கோப்பை கால்பந்து: கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி அபாரம்!

பிபா உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்று முதல் போட்டியில், கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. தோஹாவில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணி வீரர் என்னர் வலென்சியா 2 கோல்களை அடிக்கவே, முதல் பாதி ஆட்டத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்றது. கத்தார் அணி வீரர்கள் யாரும் கோல் அடிக்காததால், முடிவில் ஈகுவடார் அணி வெற்றி … Read more

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி.. 18 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். இரவு விடுதியில்  ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று … Read more