அண்ணாமலை பேச்சை கேட்க அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆர்வம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை–அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நாளை நடக்கும் கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலையின் பேச்சை கேட்க, 2,000-க்கும் அதிகமான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை, செப்டம்பர் 30-ம் தேதி, அமெரிக்கா சென்றார்.கலிபோர்னியா மாநிலம்லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செயல்படும் ‘ஆஸ்பென் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, ‘சர்வதேச தலைவர் பெல்லோஷிப்’ என்ற பயிற்சி வகுப்பை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இதில் பங்கேற்பதற்காக, … Read more

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு: கைதாகிறார் இம்ரான் கான்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில்,தெஹ்ரீக் – இ – இன்சாப், கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததையடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. பதவி விலகினார். இந்நிலையில் தனது ஆட்சிக்காலத்தில் … Read more

பெலாரசை சேர்ந்த வக்கீலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

ஓஸ்லோ-பெலாரஸ் நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளை தவிர இதர துறைகளுக்கான பரிசுகள் கடந்த 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த … Read more

அமெரிக்காவில் கத்திக்குத்து 2 பேரை கொன்ற நபர் கைது| Dinamalar

லாஸ் வேகாஸ்-அமெரிக்காவில், லாஸ் வேகாசில் மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சிலரை குத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். மர்ம நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறியதாவது: இங்கு வீதியில் நடனமாடும் சில பெண்கள், அங்கு வந்த சுற்றுலா பயணியருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், தன்னை ஒரு ‘செப்’ என அறிமுகப்படுத்தி, தான் வைத்திருந்த சமையல் … Read more

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்… இந்தியாவின் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி!

இலங்கையில் கடந்த 2009 ஆண் ஆண்டு அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். சர்வதேச போர் விிதிமுறைகளை மீறி நடைபெற்ற போரில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக உலக நாடுகள் இலங்கை மீது குற்றம்சாட்டின இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் 2012 -21 வரை இலங்கை எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அதனை இலங்கை பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் கடுப்பான … Read more

மருமகளை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி முதியவர்| Dinamalar

சான் பிரான்சிஸ்கோ-அமெரிக்காவில் மருமகளை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி முதியவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பிரெஸ்னோ நகரில் வசிப்பவர் சிடல் சிங் தோசாஞ்ச்,74. இவரது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மருமகள், குர்பிரீத் கவுர், பிரெஸ்னோ நகரில் இருந்து 240 கி.மீ., துாரத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் தனியாக வசித்து வந்தார். அங்குள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த குர்பிரீத், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

அமெரிக்கா திடீர் உத்தரவு; ஆடிப்போய் கிடக்கும் இந்திய அரசு!

பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா பயணமாகவோ வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு, அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகள் வழங்கி வருவது வழக்கமான ஒன்று தான். அவ்வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த எச்சரிக்கை அறிக்கையில் குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பி அடித்த திருமா; இந்து அமைப்புகள் ஷாக்! அதேப்போல் கிழக்கு … Read more

ஹிந்து மத சர்ச்சைக்கு பின்னணியில் சர்வதேச சதி?| Dinamalar

‘திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை ‘ஹிந்து’ அரசனாக்குவது என, தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களைப் பறித்துக் கொண்டு இருக்கின்றனர்’ என்று திரைப்பட இயக்குனர்வெற்றிமாறன் கொளுத்திப் போட்ட வன்மம், இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தக் கருத்தை ஆதரித்து திருமாவளவன், ஜோதிமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் கமல் என்று வரிசையாக ஒரு குழுவினர் வெளியே வருகின்றனர். இவர்கள் எல்லாருக்கும் பிரச்னை, ‘ஹிந்து’ என்ற சொல் தான். ராஜராஜன் காலத்தில் ‘ஹிந்து’ என்ற சொல்லே இல்லை; சைவம், வைணவம் போன்ற … Read more

WWE குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்!

சாரா லீ, பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-இன் முன்னாள் வீராங்கனை. இவருக்கு வயது 30. சாரா லீ 2015, 1016 காலகட்டங்களில் WWE-இல் பங்கேற்று வந்தார்.  ‘டஃப் எனாஃப்’ ரியாலிட்டி ஷோவில் 2015ஆம் ஆண்டு வெற்றியடைந்தார். மேலும், விளையாட்டு-பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து இயங்கி வந்தார். இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்ததாக அவரின் தாயார் டெரி லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில்,”எங்களின் சாரா வெஸ்டன் இறைவனடி சேர்ந்தார் என்பதை கனத்த இதயத்துடன் … Read more

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் அழைப்பு – பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம்

கீவ்: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடை ரஷ்ய ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் ராணுவ அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ், இந்த அழைப்பை உடனடியாக ஏற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடும் இழப்புகளைச் சந்தித்தவாறு இரு தரப்பும் போரிட்டு வருகின்றன. இரு தரப்பும் வெற்றியையும் … Read more