Nobel Prize 2022: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறும் மூன்று விஞ்ஞானிகள்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் (அக். 3) மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான … Read more

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: வேதியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கரோலின் ஆர்.பெர்டோஸி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. … Read more

வேதியியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, டென்மார்க்கை சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (அக்.,4) இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூவருக்கு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் … Read more

வட கொரியாவுக்கு பதிலடி: தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய ஏவுகணை சோதனை

சியோல்: வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு எதிர்வினையாக தென்கொரியா – அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தியுள்ளன. ஜப்பானின் கடற்பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமையன்று ஏவிய ஏவுகணை சுமார் 4,500 கிமீ பயணித்து இலக்கை தாக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கடந்த 10 நாட்களில் வட கொரியா நடத்திய 5-வது ஏவுகணை சோதனை இதுவாகும். 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியா நடத்தும் சோதனை இது. வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை காரணமாக … Read more

துபாயில் திறக்கப்பட்டது பிரமாண்ட ஹிந்து கோவில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று (அக்.,5) திறக்கப்பட்டது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.42 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 41 லட்சத்து 3 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

சோலார் பேனலில் இருந்து கீரை: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இயற்கை வகை மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிறுவன கட்டடங்கள், கால்வாய், ஆறு, ஏரி என பல இடங்களில் சூரிய ஒளி பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சோலார் பேனல்கள் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பாலைவனத்திலும் தாவரங்களை … Read more

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த ஜோ பைடன்

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைன்-ரஷியா போர் நிலவரம் குறித்து உக்ரைன் … Read more

உலகின் முதல் பறக்கும் தட்டு: அடுத்தாண்டு அறிமுகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ைஹட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தின் ‘தி ஜெட் ஜீரோஎமிசன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படகு அலையின் மேற்பரப்பில் இருந்து 3 அடி உயரத்தில் பறக்கும். மணிக்கு 76 கி.மீ., வேகத்தில் செல்லும். அடுத்தாண்டு துபாயில் ஐ.நா., வின் 23வது பருவநிலை மாற்றம் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த நோக்கத்துடன் பொருந்தி செல்லும்விதமாக அச்சமயத்தில் இப்படகு துபாயில் அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து … Read more

வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை

வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1 ஆம் தேதி (சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியுள்ளது. இது … Read more