பாலைவனத்தின் நடுவே 14 மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப் பாறைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தின் நடுவே 14 மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப் பாறைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் பாலைவனத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள பவளப்பாறைகள் 3,950 முதல் 4,250 அடி வரை உயரம் கொண்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், அங்கிருந்த பவளப்பாறைகள் மண்ணில் புதைந்து அதன் மேல் 76,000 சதுர மைல் பரப்பளவில் சுண்ணாம்புக்கற்கள் கொண்டு மூடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   … Read more

ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்| Dinamalar

கீவ் : ரஷ்யாவின் பிடியில் இருந்த முக்கியமான தங்கள் நகரத்தை, கடும் சண்டைக்குப் பின் உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த … Read more

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பயணம்| Dinamalar

லண்டன் : மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டனை நோக்கிய பயணத்தை நேற்று துவக்கியது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது.இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணியின் இறுதி சடங்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் வரும் 19ல்நடக்கிறது.அதன்பின், லண்டனுக்கு … Read more

அரியணை ஏற்கும் நிகழ்வில் சேவகர்களிடம் கடிந்துகொண்ட சார்லஸ்.. மேஜையில் ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் ஆத்திரம்

பிரிட்டன் அரசராக சார்லஸை பிரகடனப்படுத்தும் நிகழ்வின்போது மேஜையை ஒழுங்கு படுத்தும்படி ஊழியர்களிடம் அவர் கடிந்துகொண்ட காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அரியணை ஏற்கும் பிரகடனத்தில் கையெழுத்திட அவர் தயாரானபோது, அந்த சிறிய மேஜையில் பேனா டப்பா, இங்க் பாட்டில் என ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் கடுப்பான சார்லஸ் அவற்றை அப்புறப்படுத்துமாறு அரண்மனை சேவகர்களிடம் கடிந்துகொண்டார்.   Source link

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

வெல்லிங்டன்: பப்புவா நியூ கினியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியாகினர். பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. நேற்று காலை இந்த தீவில் இருந்து ௬௬ கி.மீ., துாரத்தில் பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இது, ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி … Read more

இரண்டாம் எலிசபெத்தின் உடல் எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது..!

பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டது. பால்மோரல் கோட்டையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர். எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடல் பின்னர் லண்டன் கொண்டுசெல்லப்பட்டு 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது. Source link

பிரிட்டன் ராணி இறுதிசடங்கு செலவு எவ்வளவு தெரியுமா..? – பிரிட்டன் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்..!

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார். இந்த நிலையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்களும் பிரிட்டனில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ராணி … Read more

பேருந்தும் டேங்கர் லாரியும் மோதி தீ விபத்து..! – மெக்சிகோவில் நடந்த துயரம்..!

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக நடந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி வெடித்து தீ பிடித்தது . அப்போது தீ மளமளவென பரவி பேருந்தும் தீ பற்றி ஏரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு எல்லை மாநிலமான தமௌலிபாஸில் மான்டேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் நடந்த இந்த விபத்தில் … Read more

மினி கூப்பர் காரில் நெருக்கியடித்து இருந்த 27 இளம்பெண்கள்.. கின்னஸ் உலக சாதனை படைத்த காட்சி..!

மினி கூப்பர் காருக்குள் 27 இளம்பெண்கள் நெருக்கி அடித்து கொண்டிருந்து கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்ட வீடியோ காட்சி மீண்டும் வைரலாகி வருகிறது. பிரிட்டனில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அப்போது ஒருவர் மடிமீது இன்னொருவரும், கண்ணாடி அருகிலுமென இளம்பெண்கள் படுத்து கொண்டும் நெருக்கியடித்தும் அமர்ந்திருந்தனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீடியோவை ட்விட்டரில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது.

துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல்

துபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 39 ஆயிரத்து 828 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் மொத்த உயரம், 735 அடியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நலவாழ்வு மையம், இரவு விடுதிகள், வில்லா குடியிருப்புகள் … Read more