இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள் – ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களின் நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள எஃப்-16 ராணுவ உதவியின் பின்னணி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில், “இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனான எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப்பார்க்க … Read more

பள்ளியில் துப்பாக்கிச்சூடு- 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு.!

ரஷ்யாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 சிறுவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இசேவ்ஸ்க் நகரத்தில் உள்ள பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். படுகாயம் அடைந்த 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். Source link

ஷின்ஷோ அபேவுக்கு இறுதி அஞ்சலி – ஜப்பானில் குவிந்த உலக தலைவர்கள்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் மறைவை அடுத்து இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்க 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை … Read more

சீன அதிபர் குறித்த வதந்திகளில் வெளியுறவுத்துறை, உள்துறை அமைதி காப்பது ஏன்..?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் பரவிவரும் நிலையில் வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஏன் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகவும் சீனர்கள் தெரிவித்து வருகின்றனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஆட்சிக் கவிழ்ப்பு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சீனாவை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊழல் வழக்கில் … Read more

இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், அடுத்த 3 நாட்கள் அவர் வாஷிங்டனில் செலவிடுகிறார். இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பென்டகனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி … Read more

Galactic Slam: விண்கல்லில் மோதியது டார்ட் ஸ்பேஸ் கிராப்ட்! வெற்றியா?

கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்கான நாசாவின் முயற்சி வெற்றிபெற்றது. முயற்சி வெற்றி பெற்றாலும், அது எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததா? இதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. 690 கிலோ எடை கொண்ட டார்ட் விண்கலம், 22,500 வேகத்தில் பயணித்தது. விண்கல்லை திசை மாற்றும் முயற்சி டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் கிராப்ட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் … Read more

அமெரிக்க வர்த்தக செயலாளர் உடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

வாஷிங்டன், ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வர்த்தகச் செயலாளருடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. நெகிழ்வான விநியோக சங்கிலிகள், இந்தோ-பசிபிக் பொருளாதார … Read more

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? – புரளியின் பின்னணி குறித்து அலசல்

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சில தினங்களாக சுற்றுகின்றன. இது, உண்மையில்லை என்பதை உணர்த்த, வல்லரசு நாடான சீனா அமைதி காத்து வருகிறது. இந்தப் புரளியின் பின்னணியை ஆராய்ந்தால் இது, சீனாவை சீண்டிப் பார்க்கும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை எனத் தகவல்கள் கிடைக்கின்றன. சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்த செய்திக்கான காரணங்களில் ஒன்றாக, ஜெனிபர் ஜெங் என்பவரது ட்விட்டர் பதிவு … Read more

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி

சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது டேஜியோன் நகரம். இங்கு பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ தொடங்கியது. இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர். … Read more

ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

டோக்கியோ ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2020-ம் ஆண்டு பதவி விலகிய அவர், கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி அங்கு நரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொன்றார். இது ஜப்பான் மட்டுமின்றி அகில உலகிலும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. ஷின்ஜோ அபேயின் உடலுக்கு ஜூலை 12-ந் தேதி டோக்கியோவில் இறுதிச்சடங்கு … Read more