31,000 ஆண்டுகளுக்கு முன்பு கால் நீக்கம் அறுவை சிகிச்சை? – ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் 31,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு ஆராய்ச்சியாளர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்புக்கூடு இந்தோனேசியாவின் போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கால் நீக்கம் அறுவை சிகிச்சை என்பது இந்த … Read more

96 வயதாகும் இங்கிலாந்து ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு – நலம் பெற வேண்டி உலகத்தலைவர்கள் பிரார்த்தனை..!

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத் 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக பொறுப்பு வகித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். தற்பொழுது 96 … Read more

AI CEO: சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கும் மற்றும் மல்டிபிளேயர் ஆன்லைன் கேம்களை இயக்கும் நிறுவனம், நிறுவனத்தின் “செயல்பாட்டுத் திறனை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை” நோக்கமாகக் கொண்டு, ரோபோவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு எதிரியாக மாறி அச்சுறுத்தி வருகிறது. இப்போது, ​​ஒரு சீன மெட்டாவர்ஸ் கார்ப்பரேஷன் ஒரு ரோபோவை அதன் CEO … Read more

இது என்னடா புதுசா இருக்கு; இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தை வெவ்வேறாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பெண், இருவருடன் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமடைந்தார். ஆனால் ஒன்பது மாதங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தைகள் வெவ்வேறாக இருப்பது தெரியவந்தது. இதுபோன்ற நிக்ழ பெண்ணின் கருத்தரிப்பு லட்சத்தில் ஒன்று. ஒரு 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வேறுபட்டவர்கள். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது … Read more

பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையில் முதன் முறையாக பிரிட்டன் அமைச்சரவையில் கறுப்பினத்தவருக்கு முக்கியத்துவம்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் நான்கு முக்கிய பொறுப்புகள் முதல் முறையாக வெள்ளையினத்தவர்களுக்கு வழங்கப்படாமல் கறுப்பினத்தவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதன் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த குவாஸி குவார்டெங்கை பிரிட்டன் நிதி அமைச்சராக லிஸ் டிரஸ் தேர்வுசெய்துள்ளார். இவரது பெற்றோர்கள் 1960-களில் கானா நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துவந்தவர்கள். அதேபோன்று, மற்றொரு கறுப்பினத்தவரான ஜேம்ஸ் கிளவர்லியை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமனம் செய்து லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளார். கிளவர்லி தாயார் மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோன்நாட்டையும், … Read more

ஒரே கருவில் இரட்டை குழந்தை.. ஆனால் வெவ்வேறு தந்தை.. இளம்பெண் சொன்ன பகீர் தகவல்!

ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும். பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் குதூகலமாக இருந்த பெண்ணுக்கு கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது அந்த தகவல். மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளின் டிஎன்ஏவும் வெவ்வேறாக இருந்தது. இது, அந்த பெண்ணை மட்டுமல்ல மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆச்சரியத்தை அதிகரிக்கும் … Read more

வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்பு: பாகிஸ்தானில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,343 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சிலவாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தான் வடக்கு மலைப் பகுதியில் உள்ள பனியாறுகள் உருகியதும் அதிக அளவு பருவ மழையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் மூன்றில்ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 22 கோடி மக்கள் தொகை கொண்டபாகிஸ்தானில் 3 கோடி மக்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. லட்சக்கணக்கான … Read more

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார் – முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த மனிதர் என்றும், சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் தனக்கு சிறந்த நட்புறவு இருப்பதாகவும், முன்னாள் அதிபர் ஓபாமா, தற்போதைய அதிபர் ஜோ பைடனை காட்டிலும் தானே இந்தியாவுக்கு  சிறந்த நண்பர்  என்றும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வேண்டுமென்று அனைவரும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதுகுறித்து விரைவில் … Read more

'மோடி சிறந்த நபர்; அசாதாரண சவால்களுக்கு இடையே அபாரமாக பணிபுரிகிறார்' – ட்ரம்ப் புகழாரம்

வாஷிங்டன்: பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என்று அடுக்கடுக்காக இந்தியாவுக்கும், மோடிக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் மோடி சிறந்த நபர். அவர் முன் நிறைய சவால்கள் இருந்தும். அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது பணி … Read more

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், கொரோனாவின் புதிய திரிபுகளும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் 12 … Read more